RON95 எரிபொருள் மானிய மறுசீரமைப்பில், ஏழைகளுக்கும் பொது சேவைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்

Prime Minister Anwar Ibrahim reiterated the government's ongoing efforts to rationalise the RON95 fuel subsidy.

RON95 எரிபொருள் மானிய மறுசீரமைப்பில், ஏழைகளுக்கும் பொது சேவைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்

Dated: 17.6.2025   Time: 12.50 pm  By: Punithai Chandran

கோலாலம்பூர்

நாட்டிற்கு மிக முக்கியமான எரிபொருளான RON95 எரிபொருள் மானியத்தை மறுசீரமைப்புச் (rationalize) செய்வதற்கு அரசாங்கம் தொடர்ந்து முயற்சியெடுக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மானியம் rationalize செய்வதன் மூலம் ஏழைகளுக்கு உதவ முடியும். மேலும்,  கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், சுகாதாரம் உள்ளிட்ட சிறந்த பொது சேவைகளை வழங்கவும், போதுமான வளங்கள் இருப்பதை உறுதி செய்யும் என்றும் நிதியமைச்சருமான அவர் கூறினார்.

"RON95 (எரிபொருள் மானிய rationalize) பற்றி நிறைய எதிர்மறை பிரச்சாரங்கள் உள்ளன. இருப்பினும், RON95-இன் விலை உயர்வு, நாட்டு மக்களில் 85 முதல் 90 சதவீதத்தினரைப் பாதிக்காது என்பதை தாம்  வலியுறுத்துவதாக பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

நன்றி.​ பெர்னாமா