கிளந்தான் - தாய்லாந்து - சட்டவிரோதமாக எல்லை தாண்டிய 37 பேர் கைது
Malaysian authorities have arrested 37 individuals, mostly Malaysians, for illegally crossing the Kelantan-Thai border, primarily via the Golok River in Rantau Panjang

Dated: 18.6.2025 Time: 12.30 pm By: Punithai Chandran
கோத்தா பாரு,
அண்மையில் கொண்டாடப்பட்ட ஈகைப்பெருநாள் முதல், இந்த இரண்டு வார காலப் பகுதியில், கிளந்தான்-தாய்லாந்து எல்லைப்பகுதியில் உள்ள, சட்டவிரோதப் பாதைகள் வழியாக மலேசியாவிற்குள் நுழைந்த 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மலேசியர்கள் என்று கிளந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமாட் தெரிவித்தார்.
இவர்கள் ரந்தாவ் பாஞ்சாங் பகுதியின், கோலோக் ஆற்றைக் கடந்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிப்பதைத் தொடர்ந்து, எல்லைப் பாதுகாப்புப் படையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சட்டத்தை மீறுபவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க, எல்லையில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் தாம் உத்தரவிட்டுள்ளதாகவும், இனி எச்சரிக்கைகள் விடுக்கப்பட மாட்டாது. மாறாக அங்கீகரிக்கப்படாத வழிகளைப் பயன்படுத்தி எல்லையைக் கடப்பவர்கள் எவராயினும் கைது செய்யப்படுவார்கள் என்று முகமட் யூசோஃப் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி. என்எஸ்டி