1.5 லட்சத்திற்கும் அதிகமான SPM பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகள்
The Higher Education Ministry announced that 150,557 SPM school leavers have secured spots in public universities, polytechnics, community colleges, and Mara institutions.

Dated: 16.6.2025 Time: 6.20 pm By: Punithai Chandran
பெட்டாலிங் ஜெயா,
எஸ்பிஎம் பள்ளிப் படிப்பை முடித்த 150,557 மாணவர்களுக்காக பல்வேறு கல்வி நிறுவனங்களில் உயர்க்கல்வி கற்க வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன என்று உயர்க்கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கையில், 86,589 விண்ணப்பதாரர்களுக்குப் பொதுப் பல்கலைக்கழகங்களிலும், 42,058 பேருக்குப் பாலிடெக்னிக்குகளிலும், 20,427 பேருக்குச் சமூகக் கல்லூரிகளிலும், 1,483 பேருக்கு மாரா உயர் கல்விப் பிரிவின் கீழ் உள்ள நிறுவனங்களிலும் இடங்கள் வழங்கப்பட்டன.
மாணவர் சேர்க்கை தகுதியின் அடிப்படையில் அதாவது, அதிக மதிப்பெண் முதல் குறைந்த மதிப்பெண் வரை தரவரிசைப் படுத்தப்பட்டனர் என்று அவ்வறிக்கை தெரிவித்துளள்து. .
இவர்களில் சுமார் 17,693 விண்ணப்பதாரர்களுக்கு சிறப்புத் தகுதியின் வழி இடங்கள் வழங்கப்பட்டன, இதில் 16,189 பேர்கள்ன B40 தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், 590 மாற்றுத்திறனாளிகள், 593 விளையாட்டு வீரர்கள் மற்றும் 321 ஓராங் அஸ்லி ஆகியோராவார்கள். சமூக நலத் துறையின் கீழ் உள்ள நிறுவனங்களில் இருந்து, கூடுதலாக 43 பட்டதாரிகளுக்கும் இடங்கள் வழங்கப்பட்டன.
இந்தச் சேர்க்கைக்கு மொத்தம. 349 கல்வித் திட்டங்கள் இருந்தன, இதில் 41 சான்றிதழ்கள், 55 ஃபவுண்டேஷன் படிப்புகள், 252 டிப்ளோமாக்கள் மற்றும் ஒரு இளங்கலைப் பட்டப் படிப்பு ஆகியவை அடங்கும் என்றும் அவ்வறிக்கை கூறியது.
த ஸ்டார்