அம்னோ கூட்டாட்சியிலிருந்து இருந்து விலகினால், வேறு கட்சி இடம் பிடித்துவிடும்
UMNO Deputy President Mohamad Hasan warned that if UMNO withdraws from the federal government, another party would take its place within two hours.
Dated: 16.6.2025 Time: 8.30 pm By: Punithai Chandran
பெட்டாலிங் ஜெயா,
தாங்கள் கூட்டாட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால், இரண்டு மணி நேரத்திற்குள் மற்ற ஏதாவது ஒரு கட்சி அதன் இடத்தைப் பிடிப்பதற்கு வழிவகுத்து விடும் என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்தார். அம்னோ ஓரங்கட்டுப்பட்டு வேடிக்கை பார்க்கும் கட்சியாக இருக்க விரும்பவில்லை என்றார்.
நாட்டில் சில நிலையான கட்சிகளில் அம்னோவும் ஒன்று என்பதில் அவர் பெருமிதம் கொண்ட அவர், மலாய் மற்றும் பூமிபுத்ராக்களின் திட்டங்களை தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கும், மேற்கொள்ளப்படுவதற்கும் அம்னோ தொடர்ந்து கூட்டாட்சி அரசாங்கத்தில் நீடித்திருக்கும் என்று அவர் கூறினார்.
தற்போதைய உலகில் எந்தவொரு கட்சியும் தனியாக ஆட்சி செய்ய செய்யும் அந்த சகாப்தம் முடிந்து விட்டது.
2022 பொதுத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுகளுக்குப் பிறகு, மாறிவரும் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப, அம்னோ உள் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
ஒழுங்கற்ற ஒரு கட்சிக்கு யாரும் ஆதரவளிக்க மாட்டார்கள். நல்லிணக்கத்தைப் பேணும் மற்றும் ஒரு மிதமான, அமைதியான ஒரு சக்தியாக அம்னோ தன்னை காட்டிக் கொள்ளவே விரும்புகின்றது.
அம்னோவுக்கு 192 தொகுதிகள் உள்ளன. அடுத்துவரும் தேர்தலில் அம்னோ வெற்றிப் பெறக் கூடிய தொகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோலாலம்பூர், செராஸ் அம்னோ தொகுதிப் பேராளர்கள் கூட்டத்தை தொடங்கி வைத்தபோது தெரிவித்தார்ட
நன்றி. எஃப்எம்டி.