மலேசிய ஒற்றுமை அரசாங்கம் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் சோதனையை எதிர்கொள்கிறது

The Malaysian unity government, led by Prime Minister Anwar Ibrahim, faces challenges as two ministers resign from PKR.

மலேசிய ஒற்றுமை அரசாங்கம் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் சோதனையை எதிர்கொள்கிறது

Dated: 2.6.2025    Time: 11.40 am          By Punithai Chandran

 

பிகேஆர் கட்சியில் தற்போது இரண்டு அமைச்சர்கள் பதவி விலகி உள்ளனர். ஒருவர் பிகேஆர் கட்சியில் இணைய விரும்பும் நோக்கத்தில் அம்னோவில் இருந்து வெளியேறிய நிலையால், ஒற்றுமை அரசாங்கத்தை நிலைநிறுத்த பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஒரு பெரிய சோதனையை எதிர்கொள்கிறார் என்று மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆய்வா​ளர் ஒருவரின் நம்பிக்கையாக உள்ளது.

தெங்கு ஜஃப்ருல் அம்னோவில் இருந்து விலகி, பிகேஆர் கட்சியில் சேர விண்ணப்பிப்பது, ஒற்றுமை அரசாங்கத்தில் பிரதிநிதித்திருக்கும் அம்னோ மற்றும் பிகேஆர் கட்சிகளுக்கு இடையே மனக்கசப்பை உருவாக்கலாம் என்று அவர் கூறினார்.

எனவே, ஒரு பெரிய மறுசீரமைப்பை​ச் செய்வது பொருத்தமானது என்றும் அதனை பிரதமர் துணிவுடன் செய்ய செயல்பட வேண்டும் என்றார். கட்சிகளுக்கிடையே துறைகள் மாற்ற வேண்டியிருந்தாலும், எந்தவொரு கட்சியும் முழு அமைச்சர் பதவியை தனது உரிமையாக கேட்க முடியாது. எனவே இது பிரதமரின் ஒரு முக்கி​யமான இறுதி சோதனையாகவும் இருக்கலாம் என்று அவர் எம்எம்டி-யிடம் கூறினார்.  

இதேபோன்று, ADA தென்கிழக்கு ஆசியாவின் அரசியல் ஆய்வாய் அஸ்ருல் ஹாடி அப்துல்லா சானி, இதே கருத்தையே வெளியிட்டுள்ளார்.

டெங்கு ஜாஃப்ருல் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்றால், ஒரு ​தொகுதியில் இடைத்தேர்தலை நடத்தலாம். ஆனால், சிலர் இந்த நடவடிக்கையை முறையற்றது என்று கூறினாலும், இது சட்ட விரோதமானது அல்ல என்று அவர் சுட்டிக் காட்டினார்.  எது எவ்வாறாக இருப்பினும், பிகேஆர். கட்சி நிர்வாகத்தில் பிரதமர் ஒரு பெரிய சவாலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.

நன்றி. எ​ஃம்.எம்.டி.