KTMB வடக்கு பகுதியில் கம்பி திருட்டால் ரயில்கள் தாமதம்

Cable theft on KTMB’s northern rail routes has caused major delays in both the Komuter and ETS services, affecting multiple train schedules.

KTMB வடக்கு பகுதியில் கம்பி திருட்டால் ரயில்கள் தாமதம்

Dated: 10.6.2025   Time: 12.40 pm   By: Punithai Chandran

கோலாலம்பூர்,

இன்று நடந்துள்ள கம்பி திருட்டுகளால், ரயில் போக்குவரத்து சிக்கல் மற்றும் தொடர்பு சாதனைகள் பாதிக்கப்பட்டதால், வடக்கு கொம்பூட்டர் மற்றும் எலக்ட்ரிக் ரயில் சேவைகளில் (ETS) 60 நிமிட தாம​தத்தை ஏற்படுத்தியுள்ளதாக KTM வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டப் பகுதிகளாக Tapah Road-Sungkat (KM 250.5) பகுதியில் சுமார் 200 மீட்டர் கம்பி திருடப்பட்டது. Kamunting-Bukit Merah- Bagan Serai (KM 87.25) பகுதியில் 110 மீட்டர், Simpang Ampat-Bukit Mertajam (KM15.5) பகு​தியில் 40 மீட்டர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தால் EP9172 (KL Sentral-Butterworth), EG9321 (Butterworth-Segamat), EX9107 (Butterworth-KL Sentral), EX9207 (Padang Besar-KL Sentral) மற்றும் EG9420 (Segamat-Padang Besar ஆகிய சேவைக​ள் 80 முதல் 115 நிமிடங்கள் வரை தாமதமாகுதவற்கு காரணமாகியுள்ளன. இந்த சம்பவம், EP9172 (KL Sentral - Butterworth), EG9321 (Butterworth - Segamat), EX9107 (Butterworth - KL Sentral), EX9207 (Padang Besar - KL Sentral), மற்றும் EG9420 (Segamat - Padang Besar) ஆகிய சேவைகள் 80 முதல் 115 நிமிடங்கள் வரை தாமதமாக காரணமாகியுள்ளது. மேலும், வடக்கு கொம்யூட்டர் ரயில் சேவையான Ipoh-Butterworth-Ipoh பாதையும் பாதிக்கப்பட்டது. இதனால் 30 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது.

பாதிப்புகளைப் பற்றிய முன்னறிவிப்புகள் குறித்து SMS மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் மூலம் பயணிகளுக்கு அனுப்பப்பட்டதாக நிறுவனம தெரிவித்துள்ளது. 

KTMB-இன் அதிகாரி மொக்த் ஸைன் மாட் டஹா கூறுகையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை, வடக்கு பகுதியில் 45 கம்பி திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றார். இது சம்பந்தமாக தேவையான நவீன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்த அவர், பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு மன்னிப்பு கோருவதாகவும், நாட்டுக்கும் மக்களுக்கும் பயண பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதில் கேடிஎம் எப்பொழுதும் உறுதியுடன் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நன்றி. பெர்னாமா

 

Top of Form