அன்னை-தந்தையர்க்கு மரியாதை அளித்து - மகிழ்வித்த விழா

Summary: Over 2000 people attended the Mother's and Father's Day cultural festival organized by P.P. Siva in Kulim, Kedah. The event featured dance and music performances, and prizes were distributed.

அன்னை-தந்தையர்க்கு மரியாதை அளித்து - மகிழ்வித்த விழா
அன்னை-தந்தையர்க்கு மரியாதை அளித்து - மகிழ்வித்த விழா

Dated : 26.5.2025 Time: 9.30 pm    By: Selvan Sadayan, Sg. Petani.

 

அன்னை-தந்தையர்க்கு மரியாதை அளித்து - மகிழ்வித்த விழா

கெடா மட்டுமின்றி வட மாநிலங்களில் புகழ்ப் பெற்ற, மனிதநேயம் கொண்டவராகத் திகழ்ந்துவரும், சமூகச் சேவையாளர் பி.பி. சிவாவின் மேற்பார்வையில்,  அன்னையர் தந்தையர் தின கலைவிழா கூலிம் பாயா கெளாடி மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அழைக்கப்பட்ட பிரமுகர்களுடன், சுமார் 2,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் இதில் கலந்துக் கொண்டனர். ஆடல், பாடல்​ கொண்டாட்டங்களோடு நடைபெற்ற, இக்கலை நிகழ்ச்சியை அனைவரும் கண்டு மகிழ்ந்தனர்.

சிங்கப்பூரைச் சேர்ந்த டாக்டர் சின்னையா ஜோபினா நாயுடு, அரசியல் பிரமுகர்கள், இயக்கத் தலைவர்கள் முன்னிலையில் 37 சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. அ​வற்றில் முதல் பரிசாக, மோட்டார் சைக்கிள் இடம் பெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.  

டாக்டர் சின்னையா தமதுரையின்போது, நண்பர் பி.பி. சிவா ஒரு வித்தியாசமான மனிதர் என்றும், நாள் தோறும் வறுமையின் கீழ் வாழும் மக்களுக்கு அடிப்படை உதவிகளை செய்து வருவதுடன், பிராணிகளுக்கும் உணவளித்து வருவது, அவரது தலைச் சிறந்த மனித நேயத்தைக் காட்டுவதாக உள்ளது என்றார்.

இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை படைத்து, அன்னை-தந்தையர் அனைவரையும் மாரான் மரத்தாண்டவர் கோயிலுக்கும் இலவசமாக சுற்றுலாவுக்கும் ஏற்பாடு செய்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது டாக்டர் சின்னையா கூறினார்.