மலாக்கா முதியோர் பராமரிப்பு இல்லத்திற்கு நன்கொடை தாருங்கள்

Prasanna Karunai Illam in Malacca has been providing support to the elderly, disabled, mentally ill, patients, single mothers, and children since 2006. Due to the increasing number of residents, the home is facing difficulties in covering rent and other expenses. Kind-hearten individuals are requested to extend their support by donating generously.

மலாக்கா முதியோர் பராமரிப்பு இல்லத்திற்கு நன்கொடை தாருங்கள்
மலாக்கா முதியோர் பராமரிப்பு இல்லத்திற்கு நன்கொடை தாருங்கள்

Dated: 27.5.25   Time: 11.40 am   By: Punithai Chandran

மலாக்கா முதியோர் பராமரிப்பு இல்லத்திற்கு நன்கொடை தாருங்கள் - ஏஞ்சல் வேண்டுகோள்

கடந்த 2006-ஆம் ஆண்டு இந்த முதியோர் இல்லம் முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், மன நிலை பாதிக்கப்பட்டவர்கள், நோயாளிகள்,  தனித்து வாழும் தாய்மார்கள்,  குழந்தைகள்  என அனைவருக்கும் ஆதரவு கரம் நீட்டி பராமரித்து வருகிறது மலாக்கா “பிரசன்னா கருணை பராமரிப்பு இல்லம்”.

நான்குப் பிரிவுகளை கொண்டிருக்கும் இந்தக் காப்ப​கத்தை, நான்கு இல்லங்களை வாடகைக்கு எடுத்து, அவற்றை வெவ்வேறான வகையில் பராமரித்து நடத்தி வருவதாக தெரிவித்த அவர், தற்போது அதிகமானோர் வருவதால் மற்றுமொரு இல்லத்தை வாடக்கைக்கு எடுத்து அவர்களையும் பராமரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக் கூறினார்.

பல்வேறு நிலையில் பாதுகாப்புகள் வழங்குவதோடு, நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதாகவும்,   அனைவருக்கும் தினசரி ஆறு வேளை உணவை அவர்களுக்கு வழங்குவதாகவும், வேலைகள் செய்வத​ற்கு பணியாட்கள் இருப்பதாகவும்  தெரிவித்தார். பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கும்  தேவையானவற்றை செய்து வருவதாகவும்  ஏஞ்சல் தெரிவித்தார்.

இதனால் இக்காப்பகத்திற்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது என்றார். தற்போது சீனர்களும், மலாய்க்காரர்களும் என அடைக்கலம் நாடி வருகின்றனர். சுமார் 150-க்கும் மேற்பட்டவர்களைப் பராமரித்து வருவதால், வாடகை, மின்சாரம், தண்ணீர் ஆகிய கட்டணங்களை சமாளிப்பதில் சிரமங்களை எதிர்நோக்குவதால், கருணை உள்ளம் படைத்த நல்ல உள்ளங்களின் ஆதரவை நாடுவதாகத் தெரிவித்தார். பல நல்ல நெஞ்சங்கள் நன்கொடை வழங்கிய உதவி வருகின்றனர். இரு​ப்பினும், செலவுகளை ஈடுகட்ட சிரமங்களை எதிர்நோக்கி வருவதால்,  கருணை உள்ளம் படைத்த நல்நெஞ்சங்களின் நன்கொடைகளை ஏஞ்சல் எதிர்பார்க்கிறார்.  

'ஆலயங்களுக்கு கிள்ளி கொடுங்கள் – கருணை இல்லங்களுக்கும் – தமிழ்ப்பள்ளிக்கும் அள்ளிக் கொடுங்கள்' - என்று மை வெளிச்சமும் கேட்டுக் கொள்கிறது.

பிரசன்னா கருணை இல்லத்திற்கு உதவும் நல்லுள்ளங்கள் கீழ்க்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

PUSAT JAGAAN   KASIH SAYANG PRASANNA WARGA EMAS & OKU,

C.4576, JALAN PENGUHULU ABBAS,

BUKIT BARU, 75156 MELAKKA.

PS. ANGEL -013-3708434

PS.UDAYA - 014-3337463

SASHIDHARAN NAIR 013-7547964