மலேசியா-தாய்லாந்து இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வலுவடைகின்றன
The close relationship between Malaysian Prime Minister Anwar Ibrahim and Thai Prime Minister Srettha Thavisin has elevated bilateral relations

Dated: 3.6.2025 Time: 2.40 pm By: Punithai Chandran
பெட்டாலிங் ஜெயா,
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் தாய்லாந்து பிரதமர் பெத்தோங்தார்ன் ஷினவத்ரா ஆகியோரின் நெருங்கிய உறவால் மலேசியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளால், ஒரு புதியக் கட்டத்தை எட்டியுள்ளதாக தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சர் மாரிஸ் சங்கியம் போங்சா கூறினார்.
இது, எல்லைப் பகுதிகளில் வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பையும், இரு நாடுகளுக்கும் இடையிலுள்ள கூட்டாண்மையையும் பிரதிபலிப்பதாக உள்ளது என்றார்.
2024 ஆம் ஆண்டில், உலகளவில் மலேசியாவின் ஏழாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகவும், ஆசியாவினுக்குள்ளேயே மூன்றாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகவும் தாய்லாந்து இருந்தது. இந்த ஆண்டு ஜனவரி முதல் பிப்ரவரி வரை மட்டும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 3.96 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (RM17.65 பில்லியன்) அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3.67 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (RM16.80 பில்லியன்) இருந்தது.
இரு அரசாங்கங்களும் வலுவான தொழிற் துறைகளில் வாய்ப்புகளை குறிப்பாக, ஹலால் தொழில், எண்ணை மற்றும் ரப்பர் போன்ற பெரிய தொழிற்துறைகளால் ஒத்துழைப்புக்களை பெற முடியும் என்றார். எனினும், இவை வெற்றிப் பெற வேண்டுமென்றால், தகுதியான, வலுவான தனியார் துறைகளின் பங்கேற்பைப் பொறுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் அன்வார் மற்றும் பெத்தோங்தார்ன் ஆகிய இருவரும், சடாவ்-புக்கிட் காயு ஹிதாம் எல்லைப் பகுதியில் இந்த ஆண்டு பிற்பகுதியில் கூட்டுக் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி. எஃப்எம்டி