மலேசியாவின் குழந்தைகள் ஊட்டச்சத்து சீர்திருத்தங்கள் அவசியம்
Economist Jomo Kwame Sundaram, speaking at an international social welfare conference in Kuala Lumpur, stressed the urgent need for Malaysia to reform its child food and nutrition policies to improve long-term health.

Dated: 18.6.2025 Time: 2.15 pm By: Punithai Chandran
கோலாலம்பூர்,
நீண்டகால ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறு குழந்தைகளுக்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து கொள்கைகளை மலேசியா அவசரமாக சீர்திருத்த வேண்டும் என்று பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜோமோ குவாமே சுந்தரம் தெரிவித்துள்ளார். அரசு ஊட்டச்சத்து திட்டங்களின் தரம் குறைந்ததாகவும், அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்திச் செய்யவில்லை என்றார்.
இன்று நடைபெற்ற ஒரு சர்வதேச சமூக நல மாநாட்டின் பேசிய அவர், மக்கள் உண்ணும் விதத்தில் உண்மையான விதிகள் மற்றும் மாற்றங்கள் தேவை என்றார். “நீண்ட காலம் வாழ்தல்: மலேசியா வரவிருக்கும் சவால்களுக்குத் தயாரா?” என்ற கருப்பொருளில் நடைபெற்ற அமர்வின்போது, அவர் இவ்வாறு தனது உரையில் கூறினார்.
மலேசியாவின் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு தீவிரமான எச்சரிக்கையாகும் என்று ஜோமோ கூறினார், 1980- களில் இருந்து, இதன் பாதிப்பு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. 2019- ஆம் ஆண்டில், மலேசியா சர்க்கரை வரியாக, ஒரு லிட்டர் இனிப்பு பானங்களுக்கு RM0.40 காசு என அறிமுகப்படுத்தியது, இது 2024-இல் RM0.50 காசாக உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு அதை RM0.90 காசாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வரி சில தயாரிப்பு மறுசீரமைப்புக்கு வழிவகுத்தாலும், பொது சுகாதாரத்தில் அதன் தாக்கம் இன்னும் விவாதத்திலேயே உள்ளது.
மோசமான ஊட்டச்சத்து, முதுமை மற்றும் சுகாதாரத்திற்கான சமநிலை இல்லாத அணுகுமுறை போன்ற பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வுக் காண வேண்டுமென்று ஜோமோ வலியுறுத்தினார்.
நன்றி. எஃப்எம்டி