முதலாளியால் தாக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன - காவல்துறை தகவல்
Police in Seri Alam, Johor, clarified that a 34-year-old woman assaulted by her employer on May 15 only suffered scratches and bruises, not injuries requiring surgery due to the assault itself.

Dated: 18.6.2025 Time: 1. 45 pm By: Punithai Chandran
ஜோகூர்,
ஜோகூர், ஸ்ரீ ஆலாம் காவல்துறையினர், கடந்த மே மாதம் 15ஆம் தேதி தனது முதலாளியால் 34 வயதுப் பெண் தாக்கப்பட்டது தொடர்பாக, அப்பெண்ணுக்கு, அறுவை சிகிச்சை மேவைப்படும் காயங்கள் ஏதும் எற்படவில்லை. மாறாக சிராப்புகள் மற்றும் காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே நோய் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 323-கீழ் (சுயமாகக் காயம் ஏற்படுத்துதல்) விசாரிக்கப்பட்டு வருகிறது, மேலும் விசாரணை அறிக்கை துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி. எஃப்எம்டி