மாணவர்களுக்கு தன்னாற்றல் பயிற்சிகள் சிறந்த வழிக்காட்டியாக இருக்கும்: தமிழரசு
training sessions will be a great guide for students.

Date: 28 July 2025 Time: 2.25 News By: K.Baskaran
தேசிய வகை ஜாலான் தொப்பி சுங்கை தமிழ் பள்ளியின் சார்பில் சீருடை இயக்க முகம் நடைபெற்றது. இந்த முகாம் நிகழ்ச்சியை, அறிவிப்பாளர்களான அத்திக் மற்றும் கீதா ஆகியோர் சிறப்பாக வழிநடத்தித் தொடங்கி வைத்தனர்.
இந்தச் சிறப்பு சீருடை முகாமில், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயலெட்சுமி செழியன், சிலாங்கூர் மாநில தலைமை ஆசிரியர் மன்ற தலைவரும் கிள்ளான் மாவட்ட தலைமை ஆசிரியர் மன்ற தலைவரும் தேசிய வகை தமான் செந்தோசா தமிழ் பள்ளியின் தலைமை ஆசிரியருமான தமிழரசு சுப்பிரமணியம், கிள்ளான் மாவட்ட கல்வி இலாக்காவின் துணை அதிகாரி துவான் லூபித்தி பின் முகமது யாசித், சிலாங்கூர் மாநில கல்வி இலக்காவின் பாலர் பள்ளி மற்றும் ஆரம்ப தமிழ் பள்ளிகளின் உதவி இயக்குநர் மணிசேகர் சிரங்கன், பள்ளி மேலாண்மை வாரியத்தின் தலைவரும் வழக்கறிஞருமான தனசேகரன், துணைத் தலைவர் பழனிவேல் மதுரவீரன் மற்றும் அவரது செயலவை உறுப்பினர்கள், பூபாலன் தர்மலிங்கம் மற்றும் அவரது செயலவை உறுப்பினர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில தலைமை ஆசிரியர் மன்றத்தின் தலைவர் தமிழரசு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”இது போன்ற நிகழ்ச்சிகள், மாணவர்களின் தன்னாற்றலை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வழிகாட்டியாக இருக்கும்” என்றார். அவரது இந்த பேச்சு இளம் தலைமுறை சக்தியை உணர்த்துவது போன்று இருந்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
News By:K.S.BASKARAN