துவான்கு பைனுன் ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஒன்று கூடுகின்றனர்
trainers are gathering at the college.

Date:11August 2025 Time:7.00pm News By:Ganapathy
32 ஆண்டுகளுக்குப் பிறகு துவான்கு பைனுன் ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆசிரியர்கள் தலைநகரில் ஒன்று கூடுகின்றனர்
.
கடந்த 1992-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை துவாங்கு பைனுன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் (Maktab Perguruan Tuanku Bainun) படித்துப் பட்டம் பெற்ற ஆசிரியர்கள், 32 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒன்று கூடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதாக, ஆசிரியரும், இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக்குழுத் தலைவருமான திரு. அ. விக்டர் தெரிவித்தார்
.
எதிர்வரும் 30- 8- 2025 ஆம் தேதி, Shengka Hall பத்து கேவ்ஸ் மறுநாள் 31ஆம் தேதி பத்துலை தமிழ்ப்பள்ளியிலும் பல சிறப்பான அங்கங்களுடன் இந்த நிகழ்ச்சி நடைபெறும். இதுவரை 155 ஆசிரியர்கள் தங்களது வருகையை உறுதிப்படுத்தியுள்ளனர்.
நிகழ்ச்சியின் சிறப்புப் பிரமுகராக மாண்புமிகு டத்தோஸ்ரீ எம். சரவணன் கலந்து கொள்வார் என்றும் விக்டர் ஆசீர்வாதம் குறிப்பிட்டார்.
மேல் விவரங்களுக்கு A. விக்டர் 016- 3814597 என்ற கைப்பேசி எண்ணில் அழைத்து விளக்கம் பெறலாம் என்றும் தெரிவித்தார்.