டாக்டர் மகாதீரின் மலாய்க்காரர் ஒற்றுமை முயற்சி ஏன் தோல்வியடையும்?
According to researchers Dr. Mahathir's initiative to unite Malays will fail.

Dated: 7.6.2025 Time: 11.05 am By: Punithai Chandran
பெட்டாலிங் ஜெயா,
அண்மையில் டாக்டர் மகாதீரின் நோக்கமான, மலாய்க்காரர்களை ஐக்கியப் படுத்தும் முயற்சி தோல்வியடையும் என்று அகடமி நுசந்தராவின் அஸ்மி ஹாசன் மற்றும் யுனிவர்சிட்டி டெக்னோலோஜி மலேசியாவின் மஸ்லான் அலி ஆகிய இரு ஆய்வாளர்களும் கூறியுள்ளனர்.
இது மகாதீரின் சீரற்ற நடவடிக்கை ஆகும். அனைத்து மலாய்க்காரர்களையும் ஒன்றிணைத்து, அவர்களின் அரசியல் சக்தியை மீட்டெடுக்கும் ஒரு நோக்கத்தின் அடிப்படையில், ஒரே குடை அமைப்பு என்ற மலாய் செயற்குழு ஒன்றினை மகாதீர் தொடங்கியதினை முன்னிட்டு, அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
மலாய்காரர்கள் மகாதீரின் மீதான நம்பிக்கை இழந்து விட்டனர். குறிப்பாக பாஸ் மற்றும் பெர்சத்து ஆகிய இரண்டு கட்சிகளும் மகாதீருக்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ள நிலையில், இதனை அவர்கள் மற்றொரு அரசியல் சூழ்ச்சியாகவே கருதுவார்கள் என்றனர். மகாதீரின் முன்பு உருவாக்கிய பெஜுவாங் கட்சியின் உருவாக்கம் மற்றும் கெராக்கான தானா அயர் (ஜிடிஏ) கூட்டணியின் உருவாக்கம் ஆகிய இரண்டுமே தோல்வியடைந்துள்ளன.
மேலும், சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களும் மலாய் அரசியல் சக்தியை மீட்டெடுக்கும் கருத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை என்றும், பல்லினங்கள் வாழும் இம்மலேசியா நாட்டில், இது பொருந்தாது என்றும் அவர்கள் கூறினர்.
நன்றி எஃப்எம்டி.