அடுத்த பத்தாண்டுகளுக்கு 5.8%-5.9% சதவிகித ஈவுத்தொகையை வழங்க இ.பி.எஃப் நம்பிக்கை

The Employees Provident Fund (EPF) remains optimistic about providing consistent dividends of 5.8% to 5.9% over the next 10 years, despite external investment impacts.

அடுத்த பத்தாண்டுகளுக்கு 5.8%-5.9%  சதவிகித ஈவுத்தொகையை வழங்க இ.பி.எஃப் நம்பிக்கை

Dated: 18.6.2025   Time: 11.00 am  By: Punithai Chandran

கோலாலம்பூர்

இந்த ஆண்டு தங்களது முதலீட்டு தொகுப்பில் (Portfolio) வெளிப்புற தாக்கங்கள் இருந்தாலும், தங்கள் 16 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களுக்கு நிலையான ஈவுத் தொகையை தொடர்ந்து வழங்க முடியும் தொழிலாளர் சேம நிதியின் (EPF)  தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மத் ஸுல்கர்னைன் ஓன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அடுத்த 10 ஆண்டுகளுக்கு சராசரியாக  5.8% முதல் 5.9% சதவீதம் ஈவுத் தொகை கிடைக்கும் என்று கணித்திருப்பதாக அவர் கூறினார்.

ஈவுத்தொகை விகிதம் உலகளாவிய பங்குச் சந்தை நகர்வுகள் மற்றும் உலக மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரங்களைப் பொறுத்தது என்றும், இதில் புர்சா மலேசியா மற்றும் உள்ளூர் பத்திரங்களின் செயல்திறனும் அடங்கும் என்றும் அவர் கூறினார். இருப்பினும், EPF நீண்ட கால முதலீடுகளில் அதிக கவனம் செலுத்துகிறது.

சந்தாதாரர்களுக்கு முக்கியமானது நீண்ட கால சராசரி ஈவுத் தொகையாகும். 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முந்தைய செயல்திறனைப் பார்த்தால்,  EPF ஈவுத்தொகை 5.8 முதல் 5.9 சதவீதம் வரை சீராக இருந்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கும் இதே அளவுகளை தாங்கள் இலக்காகக் கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி. என்எஸ்டி