எரிசக்தித் திறன் மேம்பாட்டில் முதலீடு செய்ய அழைப்பு
Prime Minister Anwar Ibrahim, speaking at Energy Asia 2025, emphasized the need for Malaysia to invest in improving energy system efficiency and reducing emissions, even as fossil fuels continue to dominate global supply.

Dated: 16.6.2025 Time: 1.50 pm By: Punithai Chandran
கோலாலம்பூர்,
நாட்டின் எரிசக்தி அமைப்பில் செலவைக் குறைத்து, திறனை மேம்படுத்துவதற்கான முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று எனர்ஜி ஆசியா 2025 மாநாட்டில் உரையாற்றிய, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். உலகளாவிய விநியோகத்தில் சுமார் 80% சதவிகிதம் புதைபடிவ எரிபொருட்களையே சார்ந்து இருப்பதால், இது ஒரு சவாலான பணியாகும் என்றார்.
புதிய மையங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் தேவைகளை பூர்த்திச் செய்வதற்கு எரிசக்தி மாற்றமானது, நேர்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
தற்போதைய உலக வர்த்தகம் மற்றும் பொருளாதார அமைப்புகளின் தன்மை, நம்பகத்தன்மை மற்றும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றினை அவர் சுட்டிக் காட்டினார். புவிசார் அரசியல் பதட்டங்கள், வர்த்தகப் பிரச்சினைகள் மற்றும் விநியோக சங்கிலி இடையூறுகள் அனைத்தும் இதுவரை ஒரு நிலைத்தன்மைக்கு பங்களித்துள்ளன என்றார்.
இருப்பினும், மலிவான எரிசக்திக்கு உலகளாவிய ஆதரவினைப் பெறுவது ஒரு தார்மீகக் கடமை மட்டுமல்ல, நியாயமான எரிசக்தி மாற்றத்திற்கு அடிப்படையானது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில், எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில், நமது மக்களின் சமமான தேவைகளைத் தாண்டி, சமூக நீதியையும், ஆதரவினையும் கொண்டிருக்க வேண்டும். இது மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தவும் வழி வகுக்கும் என்றும் அன்வார் கூறினார்.
நன்றி. என்எஸ்டி.