யூசோப் ராவுதரின் விடுதலைக்கு எதிராக அரசு தலைமை வழக்குரைஞர் அலுவலகம் மேல்முறையீடு
The Attorney-General's Chambers (AGC) has filed a notice of appeal against the High Court's decision to acquit and discharge Muhammad Yusoff Rawther from drug trafficking and firearms charges.

Dated: 16.6.2025 Time: 3.05 pm By: Punithai Chandran
கோலாலம்பூர்,
போதைப்பொருள் கடத்தல் மற்றும் துப்பாக்கி தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து முகமது யூசோப் ராவுத்தரை விடுதலை செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, அரசு தரப்பின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் The Attorney-General's Chambers (AGC) மேல்முறையீட்டு அறிவிப்பை தாக்கல் செய்துள்ளது.
நீதிமன்றத்தின் முடிவை மதிப்பாய்வு செய்து பரிசீலித்தப் பின்னர், இந்த விடுதலைக்கு எதிராக AGC இன்று மேல்முறையீட்டு அறிவிப்பை தாக்கல் செய்ததாக அது கூறியுள்ளது.
ஆதாரங்கள் சந்தேகத்தை மட்டுமே எழுப்பின என்றும், பொருட்கள் மீதான குற்றம் சாட்டப்பட்டவரின் உடைமை அல்லது கட்டுப்பாட்டை நிரூபிக்க போதுமானதாக இல்லை என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமது ஜாமீல் ஹுசின் தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
குறிப்பாக, வழக்குத் தொடுக்கும் தரப்பு ஒரு பிரைமா ஃபேசி வழக்கை (prima facie case) நிரூபிக்கத் தவறி விட்டதாக தீர்ப்பளித்து, யூசோப்பை போதைப் பொருள் கடத்தல் மற்றும் போலியான துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டுகளிலிருந்து ஜாமீல் விடுவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி. என்எஸ்டி.