வெளியேற்றங்களுக்கு மத்தியிலும் அம்னோ தனது வலிமை நிலைநிறுத்தும
UMNO President Ahmad Zahid Hamidi has expressed little concern over Tengku Zafrul's departure, stating it's better for those who cannot be loyal to leave.

Dated: 4.6.2025 Time: 12.30 pm By: Punithai Chandran
தெங்கு ஜாஃப்ருல் அஜிஸ் வெளியேறியது குறித்து, தாம் கவலைப்படவில்லை என்றும், அவர் விசுவாசமாக இருக்க முடியவில்லை என்றால், வெளியேறுவது நல்லது என்றும் அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி அண்மையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மலேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அவாங் அஸ்மான் பாவி கூறுகையில், அம்னோ பல அரசியல் சவால்களைச் சந்தித்துள்ளதால், அதனை அசைக்க முடியாது. தனிப்பட்ட விசுவாசத்தைவிட, கட்சியை வலுப்படுத்துவது முக்கியமே தவிர, பாராசூட் வேட்பாளர்களால் அல்ல என்று அம்னோ நம்புகிறது என்றார். வரும் காலங்களில் அம்னோ மீண்டும் ஒரு புதிய அத்தியாயத்தைக் கட்டி எழுப்பும் என்பதையே இது காட்டுகிறது. எனவே, வரும் பொதுத் தேர்தலில் அம்னோ புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு கட்சியின் வலிமையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இதற்கிடையில், யூனிவர்சிட்டி டெக்னோலோஜி மாராவைச் சேர்ந்த ஆரிஃப் ஐசுதீன் அஸ்லான் கூறுகையில், தெங்கு ஜாஃப்ருலின் எந்தவொரு தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியும் வகிக்க வில்லை என்றாலும், அவரது வெளியேற்றம் அம்னோவில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவே காட்டுக்கிறது. இந்த வேளையில்தான், அம்னோ தலைவர் ஜாஹிட் தனது அரசியல் முதிர்ச்சியைக் காட்ட வேண்டும் என்றார்.
நன்றி. எஃப்எம்டி