முஹைடின் யாசின் மீதான தேசத் துரோக வழக்கு : அரசியலமைப்புச் சட்டக் கேள்விகளை விசாரிக்கவுள்ள உயர் நீதிமன்றம்

முஹைடின் யாசின் மீதான தேசத் துரோக வழக்கு : அரசியலமைப்புச் சட்டக் கேள்விகளை விசாரிக்கவுள்ள உயர் நீதிமன்றம்

Dated: 4.6.2025   Time: 1.30 pm  By: Punithai Chandran

கோலாலம்பூர்,

கடந்த ஆண்டு கிளந்தான், குவா ​மூசாங், நெங்கிரி இடைத்தேர்தலின்போது முன்னாள் பிரதமர் முஹைடின் யாசின் தேசத் துரோக அறிக்கைகளை வெளியிட்டதாக அவர் மீது குற்றஞ் சாட்டப்பட்டது. இதன் தொடர்பான சட்டத்தின் செல்லுபடியாகும் சில விதிகளின் தன்மைக் குறித்த சட்டக் கேள்விகளை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு முஹை​டின் யாசின் கேட்டுக் கொண்டுள்ளார். உயர்நீதி மன்றம் அவரது மனுவை ஆகஸ்ட் 28ஆம் தேதி விசாரிக்கவுள்ளது.

முஹைடினுக்காக ஆஜரான வழக்கறிஞர் ஜோஷ்வா டே,  பாதுகாப்புத் தரப்பும், அரசுத் தரப்பும் இந்த தேதிக்கு ஒப்புக்கொண்டதாக நீதிமன்றத்திடம் தெரிவித்ததை அடுத்து, நீதிபதி ஜமீல் ஹுசைன் தேதியை நிர்ணயித்தார். ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் தங்கள் வாதங்களைத் தாக்கல் செய்யுமாறு,, நீதிமன்றம் அரசுத் தரப்புக்கும் பாதுகாப்புத் தரப்புக்கும் உத்தரவிட்டது. அரசுத் தரப்பு சார்பில் துணை அரசு வழக்கறிஞர் ரசாலி சே அனி ஆஜரானார்.

நவம்பர் 27 அன்று, அவரது வழக்கை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற அனுமதிக்கும் அவரது விண்ணப்பத்தையும் நீதிபதி அஸ்மி அப்துல்லா அனுமதித்தார்.

நன்றி. எஃப்எம்டி