மலேசியாவிற்குள் நுழையும் சிங்கப்பூர் வாகனங்களுக்கு வாகன நுழைவு அனுமதி (VEP) அமல்
Malaysia will implement a Vehicle Entry Permit (VEP) starting July 1st for Singapore-registered vehicles entering into the country

Dated: 4.6.2025 Time: 2.00 pm By: Punithai Chandran
புத்ரா ஜெயா,
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள், மலேசியாவின் நில எல்லைகளைக் கடக்கும்போது, அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, வாகன நுழைவு அனுமதி (VEP) அமுல்படுத்தப்படவுள்ளது. இது எதிர்வரும் ஜூலை 1ஆம் தேதி முதல், நடைமுறைக்கு வரும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக் அறிவித்துள்ளார்.
இதனை அமல்படுத்த போதுமான அவகாசம் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2017ஆம்ஆண்டு முன்மொழியப்பட்டு, 2019-இல் முதலாவது முறையாகவும், 2020-இல் இரண்டாவது முறையாகவும் ஒத்தி வைக்கப்பட்டது.
VEP இல்லாத வாகனங்களுக்கு 300 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும். இது மலேசியாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதற்கு முன்பு செலுத்தப்பட வேண்டும். முன்பதிவு செய்தும், VEP- பயன்படுத்த முடியாதவர்களும், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பதாக அபராதத்தைச் செலுத்த வேண்டும் என்று லோக் கூறினார்.
நிறுவனத்திற்கு சொந்தமான தனியார் வாகனங்களுக்கும், செல்லுபடியாகும் VEP இல்லை அல்லது பதிவு செய்யப்படவில்லை என்றால், நிறுவன வாகனத்தின் ஓட்டுநருக்கும் அபராதம் விதிக்கப்படும்.
அபராதங்களை சாலை போக்குவரத்து துறை (JPJ) கவுண்டர்கள், JPJ மொபைல் அல்லது MyEG வழியாக ஆன்லைனில் பணமில்லா முறைகள் மூலம் செலுத்தப்பட வேண்டும்.
நெரிசலைத் தடுக்க எல்லை சோதனைச் சாவடிகளுக்கு வெளியே அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் லோக் கூறினார்.
நன்றி. எஃப்எம்டி