நிதி முறைகேடுகளைக் கையாள சிறப்பு பணிக்குழு

Prime Minister and Finance Minister Anwar Ibrahim announced today that the government will establish a special task force to address financial irregularities.

நிதி முறைகேடுகளைக் கையாள சிறப்பு பணிக்குழு

Dated: 4.6.2025   Time: 3.30 pm  By: Punithai Chandran

பெட்டாலிங் ஜெயா,

நிதி முறைகேடுகளை கையாள்வதற்காக அரசாங்கம் ஒரு சிறப்பு பணிக் குழுவை அமைக்கும் என்று பிரதமரும், நிதியமைச்சருமான அன்வார் இப்ராஹிம் இன்று சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தின்போது தெரிவித்தார்.

இந்தக் பணிக்குழுவானது, பொறுப்பேற்றல், வெளிப்படைத் தன்மை மற்றும் ஒருமைப்பாடு ஆகிய கொள்கைகளுக்கு ஏற்ப பணியாற்றும். மேலும், அடுக்க கட்ட நடவடிக்கைகள் முழுமையானதாக, இலக்குடன் கூடியதாக, அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

‘பொதுப் பணத்தைப் பின்​ தொடர்து கண்காணித்தல்’ என்றவொரு த​ணிக்கை முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதன் வழி தலைமைத் தணிக்கையாளர்களுக்கு அதிகமான அதிகாரங்கள் வழங்கப்படும் என்றும் கூறிய அவர், அரசாங்கத்தின் நிதி உத்தரவாதங்களைப் பெறும் நிறுவனங்களும்,  இந்த தணிக்கை முறையைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும் என்றார்.

நன்றி. எஃப்எம்டி