தெங்கு ஜஃப்ருலின் பிகேஆர் அதிகாரப்பூர்வமான உறுப்பினர்இல்லை
Selangor Menteri Besar Dato' Seri Amirudin

Dated: 31.5.2025 Time: 10.40 pm By: Punithai Chandran
கோம்பாக், மே 31,
டத்தோ ஸ்ரீ தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஸிஸின் பிகேஆர் வருகை தன்னை மாற்றுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதி என்ற ஊகத்தை சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருதீன் ஷாரி இன்று மறுத்துள்ளார்.
தாங்கள் இருவரும் கடந்த காலங்களில் ஒன்றாக இணைந்து, குறிப்பாக முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை, விண்வெளி போன்ற திட்டங்களில் பணியாற்றியிருப்பதாகக் தெரிவித்தார்.
பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே உள்ளன. எனவே, இது சூழ்ச்சிக்கான நேரமல்ல, மாறாக மக்களின் முன்னேற்றத்திற்கான வலுவான பணிகளை மேற்கொள்ள வேண்டிய காலம் என்றார். தெங்கு ஜஃப்ருல் கட்சியை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து ஒரு புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அம்னோவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும், அது குறித்து தமக்கு முழுமையாகத் தெரியாது என்றும் அமிருதீன் தெரிவித்தார்
.
நேற்று, தெங்கு ஜஃப்ருல் அம்னோவில் இருந்து ராஜினாமா செய்ததாகவும், பிகேஆரில் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். இதற்கிடையில் தெங்கு ஜஃப்ரு-விடமிருந்து கட்சி இன்னும் அதிகாரப்பூர்வமான உறுப்பினர் விண்ணப்பத்தைக் கூட பெறவில்லை என்று பிகேஆர் பொதுச் செயலாளர் புஜியா சல்லேவின் அறிக்கையை அமிருதீன் மீண்டும் வலியுறுத்தினார்.
www.myvelicham.com / tik tok / face book / thank you bernama