நீண்டகால வட்டார தொலைநோக்கு “கோலாலம்பூர் பிரகடனம்”

'Kuala Lumpur Declaration'.

நீண்டகால வட்டார  தொலைநோக்கு  “கோலாலம்பூர் பிரகடனம்”

Date ; 31 May 2025 News By:Ponrangan Time ; 12.35 

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உட்பட 10 ஆசியான் தலைவர்களும் ‘நமது பகிரப்பட்ட எதிர்காலம்’ என்ற நீண்டகால வட்டார  தொலைநோக்கு ஆவணத்தில் கையெழுத்திட்டனர். “கோலாலம்பூர் பிரகடனம்” என்று அழைக்கப்படும் இந்த ஆவணம்,  ஆழமான வட்டார ஒருங்கிணைப்பை நோக்கிய கூட்டமைப்பின் தொடர்ச்சியான பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லைக் குறிக்கிறது. இந்த நீண்டகால கட்டமைப்பு,  மலேசியாவின் தலைமையின் கீழ், ‘2015 இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆசியான் 2025’ என்பதற்கிணங்க, ஒன்றிணைந்து முன்னேறுதல் என்பதற்குப் பதிலாக அமைகிறது.

இது ஆறு முக்கிய ஆவணங்களைக் கொண்டுள்ளது:

ஆசியான் 2045 குறித்த, ‘கோலாலம்பூர் பிரகடனம்’: நமது பகிரப்பட்ட எதிர்காலம் ஆசியான் சமூக - தொலை நோக்கு (ACV)  2045 — நெகிழ்ச்சித்  தன்மை -  புதுமையானது -  ஆற்றல் மிக்கது மற்றும் மக்களை மையமாகக் கொண்ட ஆசியான் ஆகும்.

கோலாலம்பூர் பிரகடனம் என்றால் என்ன?

கோலாலம்பூர் பிரகடனம் என்பது, கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடந்த 46-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது, கையெழுத்திடப்பட்ட ஓர் அடிப்படை இராஜ தந்திர ஆவணமாகும். இது ஆசியான் சமூகத் தொலைநோக்கு 2045-யை முறையாக ஏற்றுக் கொண்டு, அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு வட்டாரங்களின் முக்கிய தகவல் தொடர்பினை ஏற்படுத்தும்.

இந்த பிரகடனம் திறம்பட செயல்படுத்தல் - மேம்பட்ட நிறுவன திறன் - ஆழமான வட்டார ஒத்துழைப்பு -ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஆசியானின் ஒற்றுமை – நிலைத்தன்மை - நிலையான வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

ஆசியான் 2045 என்றால் என்ன?

‘ஆசியான் 2045’ என்பது, நமது பகிரப்பட்ட எதிர்காலம் என்பது, 2045 ஆண்டு வரை வட்டாரத்தின் வளர்ச்சி, ஒருங்கிணைப்பை வழிநடத்தும் ஒரு விரிவான மூலோபாய வரை படமாகும்.

ஆசியான் 2025 தொலைநோக்கு பார்வையை உருவாக்கி,  இந்தோ-பசிபிக் பகுதியில், ஒரு முக்கிய வளர்ச்சி மையமாக வட்டாரத்தின் பங்கை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. ஒரு நெகிழ்ச்சியான – புதுமையான -ஆற்றல்மிக்க மக்களை மையமாகக் கொண்ட ஆசியான் சமூகத்தை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டது. 

ஆசியான் ஏன் 20 ஆண்டுகால தொலை நோக்குப் பார்வையை ஏற்றுக் கொள்கிறது?

வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய நிலப்பரப்பின் மத்தியில், இரண்டு தசாப்த காலக் கண்ணோட்டம், உறுப்பு நாடுகள், பொதுவான இலக்குகளை அடைவதற்கான தெளிவான மற்றும் தகவமைப்புத் திட்ட வரைபடத்தை வழங்குகிறது. இது நீண்டகால மூலோபாயத் திட்டமிடலை ஆதரிக்கிறது. வள ஒதுக்கீட்டை முன்னுரிமைப்படுத்துகிறது மற்றும் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்க உதவுகிறது.

அத்தகைய நீண்டகால கட்டமைப்பு நிலைத்தன்மை, எதிர்கால முன்னேற்றங்களுடன் சீரமைப்பு,  வளர்ந்து வரும் வாய்ப்புகள், சவால்களுக்கு ஒரு முன் முயற்சியுடன் கூடிய பதிலை உறுதி இது செய்கிறது.

ஆசியான் சமூக தொலைநோக்குப் பார்வை 2045 இன் முக்கிய தூண்கள்:

இந்த தொலைநோக்குப் பார்வை நான்கு முக்கிய தூண்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் உள்ளடக்கம் – மீள்தன்மை - வட்டார வலிமை ஆகியவற்னை ஊக்குவிக்கிறது:

அரசியல் பாதுகாப்பு

அனைத்துலகச் சட்டத்தை அமைதி – நிலைத்தன்மை - பின்பற்றுதலை ஊக்குவித்தல் - ஆசியானின் வட்டாரப் பங்கை மேம்படுத்துதல் – நடுநிலைமை – பாதுகாப்பு ஆகியவற்றினைப் பாதுகாத்தல்;

பொருளாதாரம்

புதுமை - டிஜிட்டல் மாற்றம் - வலுவான விநியோகச் சங்கிலிகள் - நிலையான வளர்ச்சி - ஆகியவற்றினை மேம்படுத்துவதன் மூலம் ஆசியானை உலகின், நான்காவது பெரிய பொருளாதாரமாக நிலைநிறுத்துதல்;

சமூக-கலாச்சாரம்

பகிரப்பட்ட அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட, ஒரு ஒருங்கிணைந்த உள்ளடக்கிய சமூகத்தை வளர்ப்பது; அதே நேரத்தில் சுகாதாரம் - சமூக நீதி - பாலின சமத்துவம் - இளைஞர்க்கு அதிகாரம் மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பை ஆதரித்தல்;

இணைப்பு மற்றும் நிறுவன திறன்

உள்கட்டமைப்பு - டிஜிட்டல் இணைப்பை அதிகரித்தல் --நகர்ப்புற மீள்தன்மையை வலுப்படுத்துதல் - மிகவும் பயனுள்ள நிர்வாகத்திற்காக - ஆசியான் நிறுவனங்களை மேம்படுத்துதல் ஆகும்..

ACV 2045-இல் புதியது என்ன?

கடந்த கால முயற்சிகளைக் கட்டியெழுப்புகையில், ACV 2045 பல எதிர்கால முன்னுரிமைகளை அறிமுகப்படுத்துகிறது:

உலகளாவிய விவகாரங்களில் வட்டாரத் தலைமை

வட்டாரம் - உலகளாவிய சொற்பொழிவை வடிவமைப்பதில் ஆசியானின் பங்கை வலுப்படுத்துதல் - விதிகள் சார்ந்த அனைத்துலக ஒழுங்கை நிலைநிறுத்துதல் -  இந்தோ-பசிபிக் மீதான ஆசியான் கண்ணோட்டம் போன்ற, ஆசியான் தலைமையிலான வழிமுறைகளை வலுப்படுத்துதல்;

டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரங்களில் கவனம் செலுத்துதல்

டிஜிட்டல் - சுற்றுச்சூழல் அமைப்புகள் - சைபர் பாதுகாப்பு - மேம்பட்ட தொழில் நுட்பங்கள் - பசுமை வளர்ச்சி - நீலப் பொருளாதாரம் ஆகியவற்றின் வளர்ச்சியை துரிதப்படுத்துதல்;

அதிக உள்ளடக்கம்

கொள்கை உருவாக்கம் – கூட்டு முயற்சிகளில் பெண்கள் - இளைஞர்கள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களின் வலுவான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல்;

நிலைத்தன்மை, மீள்தன்மை

காலநிலை நடவடிக்கை  சுற்றுச்சூழல் பாதுகாப்பு -  தொற்றுநோய் தயார்நிலை - விநியோகச் சங்கிலி மீள்தன்மை - ஆகியவற்றை நிகழ்ச்சி நிரலில் இணைப்பது ஆகியவற்றை உள்ளடக்கியது.

Date : 31 May 2025 PonRangan News Writer  www.myvelicham.com / Thanks Makkal osai