பொது மக்களே நாட்டின் உண்மையான ஆற்றல்

Date: 30.5.2025 Time: 5.00 By: Punithai Chandran
நாட்டின் ண்மையான ஆற்றலே பொதுமக்கள்தான். இந்த ஆற்றலை மீண்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, பிகேஆர் பொருளாதார அமைச்சராக பதவி வகித்து வந்த ரஃபிஸி ரம்லி கூறியுள்ளார்.
தாம் கவனம் செலுத்த வேண்டிய திட்டங்கள் இன்னும் உள்ளன என்றும், நிலைமை அமைதியாகும் வரை தாம் காத்திருக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார். காரணம், தற்போது தாம் செய்திகள் மற்றும் சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் பதிலளித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
கடந்த வாரம் நடைபெற்ற கட்சித் தேர்ததலில் ரஃபிஸி , நூருல் இஸா அன்வாரிடம் தோல்வியடைந்தார். பிகேஆர். துணைத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படா விட்டால், அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வகையில் டத்தோஸ்ரீ ரஃபிஸி ரம்லியின் ராஜினாமா ஜூன் 17ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி. எஃப்.எம்.டி.