ரம்ஃபிஸி ரம்லியின் துணிச்சலான கருத்துக்களுக்கு நூருல் இஸாவின் பாராட்டு

Nurul Izzah Anwar commended his ideas for shaping national policies and recognized him as someone who consistently spoke the truth against authority.

ரம்ஃபிஸி ரம்லியின் துணிச்சலான கருத்துக்களுக்கு நூருல் இஸாவின் பாராட்டு

Dated: 30.5.2025        Time:  11.00 am       By: Punithai Chandran

ரம்ஃபிஸி ரம்லியின் துணிச்சலான கருத்துக்களுக்கு நூருல் இஸாவின் பாராட்டு

கோலாலம்பூர், மே 29

பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த டத்தோஸ்ரீ ரம்ஃபிஸி ரம்லிக்கு இன்று ​நூருல் இஸா அன்வார் பாராட்டி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். ​அவரது சிந்தனைகள் யாவும் தேசியக் கொள்கைகளை செம்மைப்படுத்தி செயல் வடிவமாகும் என்றார்.  டத்தோஸ்ரீ ரம்ஃபிஸி ரம்லி அதிகாரத்திற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொண்டு உண்மையைப் பேசியவர் என்று ஒரு பேஸ்புக் பதிவில் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஒருவர் அரசாங்கப் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும்கூட, நாட்டிற்குத் தேவையான துணிச்சலான கருத்துக்கள் எப்போதும் தேவைப்படுகிறது. அந்த வகையில் அவர் தொடர்ந்து நாட்டிற்கு பங்களிக்க முடியும் என்று தாம் நம்புவதாக நூருல் இஸா தெவித்தார்.

வரும் காலங்களில் கட்சியை வலுப்படுத்துவதிலும், தலைமையை நெருக்கமாக கண்காணிப்பதிலும் தாம் கவனம் செலுத்தப் போவதாக நூருல் கூறினார்.

டத்தோஸ்ரீ ரம்ஃபிஸி ரம்லியின் ராஜினாமா ஜூன் 17-ஆம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது.

நன்றி. மலாய் மெயில்