நமது இந்தியர்கள் வியாபாரங்களில் எப்போதும் வேரூன்றி இருக்க வேண்டும்

A short tea break at Muthu Tea Corner, a newly opened tea shop right here in Perai.

நமது இந்தியர்கள் வியாபாரங்களில் எப்போதும் வேரூன்றி இருக்க வேண்டும்

Dated: 6.6.2025      Time: 1.30 pm   By: Punithai Chandran

தனது பொது மக்கள் சந்திப்பிற்கு பின்னர், பிறையில் உள்ள புதியதாக தொடங்கப்பட்ட முத்து டீ கார்னரில் ஒரு தேநீர் அருந்தியதாகவும்,  அந்தத் தேநீர் மாறுபட்ட ஒரு சுவையில் இருந்ததாகவும், டத்தோஸ்ரீ எஸ். சுந்தராஜூ கூறினார். அந்தக் கடையில் சுவையுள்ள பல இந்தியப் பலகாரங்கள் இருந்ததாகவும், புதியதாக தயாரிக்கப்பட்ட தேநீர் மற்றும் காப்பியும் கிடைக்கின்றன என்றும், அவை உண்மையிலேயே சுவையானதாக இருந்தாகவும் அவர் தெரிவித்தார். ஒரு மாறுபட்ட சூழ்நிலையில் மாலை தேநீர் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்று விரும்பின்றவர்கள் இங்கு வரலாம் என்றார்.

நான் பிறை ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்தபொழுது, இந்தியர்கள் வணிகத் துறைகளில் ஈடுபட வேண்டுமென்ற நோக்கத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருந்து வந்துள்ளேன். எனவே, இதுபோன்ற வியாபாரங்கள் நமது ச​மூகத்தின் எக்காலத்திலும்      வே​ரூன்றிக் கொண்டே இருக்க வேண்டும். ​முத்து டீ கார்னரைப் பார்த்தபொழுது எனக்கு அந்த எண்ணம்தான் மேலோங்கி இருந்தது என்று டத்தோஸ்ரீ எஸ். சுந்தராஜூ கூறினார்.