யூசோஃப் ராவ்தர் விடுதலை: காவல்துறை, உள்துறை அமைச்சகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை
The Kuala Lumpur High Court has acquitted former PM aide Yusoff Rawther of drug trafficking and possession of fake firearms charges.

Dated: 12.6.2025 Time: 5.40 pm by: Punithai Chandran
கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று, பிரதமர் அன்வார் இப்ராஹிமின் முன்னாள் உதவியாளர் யூசோஃப் ராவுத்தரை போதைப்பொருள் கடத்தல் மற்றும் போலி துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்தது. போதைப்பொருள் மற்றும் போலி துப்பாக்கிகள் தனக்கு எதிராக செய்யப்பட்ட ஒரு நடவடிக்கை என்று யூசோஃப் வாதிட்டார்.
இந்த விடுதலையை அடுத்து, யூசோஃப் ராவுத்தர் காவல்துறையினர் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பரிசீலிப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
இது குறித்து பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் தலைவர் அஹ்மத் ஃபட்லி ஷாரி மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
யூசோஃப்க்கு எதிராக கஞ்சா மற்றும் போலி துப்பாக்கிகளை கொண்டிருக்கும் வகையில் இந்தச் செயலை செய்ய உத்தரவிட்டவர்கள் யார் என்பதை வெளிக்கொணர இந்த சட்ட நடவடிக்கை உதவும் என்று அவர்கள் கூறினர்.
இதற்கிடையில், யூசோஃப் ராவுத்தர் 2018- இல் அன்வார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி, 2021-இல் தொடரப்பட்ட ஒரு தனி சிவில் வழக்கில், மேல்முறையீட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்காலத் தடையை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி. மலேசியக் கினி