மித்ரா நிதி தாமதமாகிறது - பிரதமர் தலையிட வேண்டும்
A DAP senator calls for Prime Minister Anwar Ibrahim to intervene in the Malaysian Indian Transformation Unit's (MITRA) delay in disbursing RM40 million in approved funds for 45 community programs

Dated: 12.6.2025 Time: 6.30 pm by: Punithai Chandran
மலேசிய உருமாற்றப் பிரிவு (MITRA) அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதியை வழங்குதில் தாமதம் ஏற்படுத்துவதை தீர்த்து வைக்குமாறு டிஏபி கட்சியின் செனட்டர் டாக்டர் அ. லிங்கேஸ்வரன் பிரதமரை வலியுறுத்தியுள்ளார். பட்ஜெட் 2025 இன் முதல் கட்டத்தின் கீழ் RM40 மில்லியன் மதிப்புள்ள 45 சமூக அடிப்படையிலான திட்டங்களுக்கான இன்னும் நிதி கிடைக்கவில்லை என்று டாக்டர் அ. லிங்கேஸ்வரன் கூறினார்.
2025ஆம் ஆண்டு வரவு செலவின் கீழ், (Budget 2025) ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட் குறித்த முழுமையான பொது அறிக்கை, அங்கீகரிக்கப்பட்ட தொகை, வழங்கப்பட்ட தொகை மற்றும் நிலுவையில் உள்ள தொகைகள் உட்பட, மித்ரா வெளிப்படையாக வெளியிட பிரதமர் தலையிட்டு, உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறும் பிரதமர் அன்வார் இப்ராஹிமை லிங்கேஸ்வரன் வலியுறுத்தினார். இந்த நிதிகள் கல்வி, திறன் பயிற்சி, தொழில்முனைவோர் மேம்பாடு, பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் பிற உயர்தர முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக உருவாக்கப்பட்டவை.
ஆனால் இந்த தாமதத்தினால், விண்ணப்பதாரர்களின் அமலாக்கத் திட்டங்களைப் பாதித்துள்ளது - சமூக காலக்கெடுவைத் தாமதப்படுத்தியுள்ளது - மற்றும் நல்லெண்ணத்துடன் செயல்பட்ட பங்குதாரர்களின் நம்பிக்கையை இழந்துள்ளது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மித்ராவின் சமூக-பொருளாதார மேம்பாட்டு மானியத் திட்டம் 2025-க்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 2, 2024 முதல் ஜனவரி 5, 2025 வரை, அதாவது ஆறு மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டதாகவும் டாக்டர் லிங்கேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
அப்பொழுது இருந்தே விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு தேவையையும் பூர்த்திச் செய்துள்ளனர் - முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளனர் - மதிப்பீடுகளைச் செய்துள்ளனர், ஒப்புதல்களைப் பெற்றுள்ளனர் மற்றும் முறையான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டும் உள்ளனர்.
எனவே இதனை பிரதமர் அன்வார் இப்ராஹிம் இந்த விவகாரம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று செனட்டர் லிங்கேஸ்வரன் வலியுறுத்தினார்.
நன்றி. மலேசியக் கினி