டத்தோஸ்ரீ ரஃபிஸி ராம்லி அரசியலுக்கு முற்றிப்புள்ளியா?

After losing the PKR Deputy President race, Rafizi Ramli steps away from his 27-year political journey to return to private life. This exit sparks the question—who will be PKR’s next economic strategist?

டத்தோஸ்ரீ ரஃபிஸி ராம்லி அரசியலுக்கு முற்றிப்புள்ளியா?

Dated : 26.5.2025  Time: 1.30     By: Pon Rangan

டத்தோஸ்ரீ ரஃபிஸி ராம்லி அரசியலுக்கு முற்றிப்புள்ளியா?

பி.கே.ஆரில். யார் அடுத்த நிதி அமைச்சர்?

நூருல் சரியான தேர்வா?  அல்லது பேராளர்களின் அரசியல் ஆசைக்கு துணையில் ஏமாறப் போவது மக்களா?

பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் தோல்வியடைந்து, கட்சியின் உயர்மட்டத் தலைமை மட்டத்தில், பல தசாப்தங்களாக நீடித்து வந்த பதவியை ரஃபிஸி முடித்துக் கொண்டார்.

தாம் தனிப்பட்ட வாழ்க்கைக்குத் திரும்பத் தயாராகி வருவதால், "மிகுந்த நிம்மதியை" உணர்கிறேன் என்று டத்தோஸ்ரீ ரஃபிஸி ராம்லி கூறுகிறார்.

"நேர்மையாகச் சொன்னால், நான் அவ்வளவு மோசமாக உணரவில்லை. அதிகாரத்தின் தாழ்வாரங்களின் சூழ்ச்சிகளிலிருந்து விலகி, ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை வாழத் திரும்ப முடியும் என்பதில் எனக்கு மிகுந்த நிம்மதி இருக்கிறது," என்று அவர் இன்று  பத்திரிகையில் ஒரு நீண்ட பதிவில் கூறினார்.

47 வயதான பாண்டான் எம்.பி.யும், நீண்டகால பிகேஆர் முக்கிய அரசியவாதியுமான இவர்,  நீதிமன்றப் போராட்டங்கள்,  நிதி ஊழல்கள் மற்றும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கீழ் பணியாற்ற பெருநிறுவன உலகில் இருந்து, முன்கூட்டியே புறப்படுவது போன்ற, தனது 27 ஆண்டுகால அரசியல் பயணத்தைப் பற்றி சிந்தித்தார்.

தேர்தல் தோல்வி இருந்த போதிலும், சீர்திருத்தத்திற்கான தனது அர்ப்பணிப்பு மாறாமல் உள்ளது என்பதை ரஃபிஸி தெளிவுபடுத்தினார்.

,"மலேசியா சிறப்பாக இருக்க வேண்டும் என்ற இலட்சியவாத நம்பிக்கையை நான் கைவிட விரும்பவில்லை. அந்த நம்பிக்கைதான் என்னை முதலில் செயல்பாட்டிலும் அரசியலிலும் ஈர்த்தது," என்று அவர் கூறினார். 32 ஆயிரம் பேராளர்களில் 12 ஆயிரம் பேர் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். இது 36% சதவிகித வாக்குகள், அல்லது 1.2 மில்லியன் பி. கே.ஆர். உறுப்பினர்களில் 1% பேராளர்களின் தீர்ப்பாகும். கட்சியின் தலைவர் பதவி ஏகமனதாக 100% ஆதரவு என்பதால், இந்த 1% எவ்வித அரசியல் பொருளாதார விகிதம்?

அரசியல் அரசுகளில் மானசீகமாக எத்தனை நெஞ்சங்கள் அழுதன,  மகிழ்ந்தன என நமக்குத் தெரியாது. எனினும் 3 ஆயிரம் ஆதரவாளர்களின் ஆதரவிற்கு கண்ணீரில் ரஃபிஸி நன்றி தெரிவித்தார்.

அது ஆனந்தக் கண்ணீரா,  மக்களை நினைத்த சோகக் கண்ணீரா என அந்த அல்லாவுக்கே தெரியாது!