ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து இடை நிறுத்தம்

Dated: 29.5.2025 Time: 1.20 pm By: Punithai Chandran
முழுமையான தணிக்கைக்கு பொது போக்குவரத்து சங்கம் கோரிக்கை
சரியான காலத்தோடு பேருந்துக்கான அனுமதி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதாலும், உரிமம் தொடர்பான தேவைகளைப் பூர்த்திச் செய்யாததாலும், சுபாங் ஜெயாவில் இருந்து ஐந்து பேருந்து வழித்தடங்கள் இடை நிறுத்தம் செய்யப்பட்தைத் தொடர்ந்து, Smart Selangor மீது ஒரு முழுமையான தணிக்கையைச் செய்ய வேண்டுமென்று மலேசிய பொது போக்குவரத்துச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது Smart Selangor-ரின் அக்கறையின்மைக் காட்டுவதாகவும், இது பயணிகளின் நலனைப் புறக்கணிப்பதாகவும் உள்ளது என்று சங்கத்தின் தலைவர் அஜித் ஜோஹால் தெரிவித்தார்.
இந்த இடை நிறுத்தத்தால், பணியாற்றுபவர்கள், பெரியவர்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோரின் அன்றாட வழக்கத்தை சீர்குலைத்துள்ளது என்றார்.
பயணிகள், குறிப்பாக B40-இல் வாழும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும், அவர்கள் தவிப்பில் இருக்கின்றனர் என்று கூறியதுடன், நம்பமான போக்குவரத்து இல்லாமல் இருந்தால், மாணவர் ஒருவர் தனது தேர்வைத் தவற விட்டிருந்தால் என்ன ஆகும் என்று கற்பனை செய்து பாருங்கள் என்று கூறி தனது வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டார்..
எனவே, இலவச சேவைகள் வழங்கினால் சாக்குப் போக்கு சொல்லக்கூடாது. ஆவணங்கள் சரியான முறைப்படுத்தியிருக்க வேண்டியது அவசியம் என்று அஜித் ஜோஹால் வலியுறுத்தினார்.
நன்றி.என்.எஸ்.டி. www.myvelicham.com