இனங்களை அவமதிக்காமல், மலாய்க்காரர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்:
Without insulting races, Malays should improve themselves:

Date : 01 May 2025 News By: Rm Chandran
மற்ற சமுதாயத்தினரை இழிப்படுத்துவதன் மூலமாக நம்பிக்கை, நன்னடத்தைகளின் வழி மலாய்க்காரர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டுமே தவிர, மற்ற சமுதாயத்தினரை இழிவுப்படுத்துவதன் வழியாக அல்ல என்பதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தினார்
.
உண்மையான வலிமை என்பது தார்மீக ஒழுக்கத்திலும், பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வதிலும் உள்ளது.
அதேவேளை பொது நிதியை மோசடி செய்வது, தனிப்பட்ட ஆதாயத்திற்காக அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துவது போன்ற கலாச்சாரம் நீண்டகாலமாக சமூகத்தின் முன்னேற்றத்தை குறைவான மதிப்பிற்கு தள்ளப்படுகிறது. ஆகவே இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும்.
நமது நம்பிக்கையை மேம்படுத்தி, நம் தலைவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் மக்களிடமிருந்து எதையும் திருடாமல் அல்லது தனிப்பட்ட ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொள்ளாமல், நல்ல குணங்களோடு தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
இந்தக் கலாச்சாரம்தான் மலாய்க்காரர்களை அழித்து விட்டது என்று, இங்குள்ள முக்கியம் பத்துவில் வீட்டு வசதி மேம்பாட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டபோது தெரிவித்தார்.
தனது பெயரில் எந்தவொரு கட்டிடமும் இல்லை சிலர் கூறுவதைப் போல் நான் பிரதமராக இருக்கும் காலத்தில் மக்களின் வீடுகளும், நாடும் மேம்படுத்தப்பட்டன என்று சொல்லிக் கொள்வதில்தான் தாம் பெருமைக் கொள்வதாகவும்
மற்றவர்கள் குறிப்பாக, சீனர்கள், இந்தியர்களை அவமதிப்பதின் மூலமாக மலாய்கார்கள் வலிமையானவர்களாகவும் ஆகிவிட முடியாது என்றும் பிரதமர் தெளிவு படுத்தினார்.
Thank you Malay mail.