AI குரல் மோசடி RM 5,000 வெள்ளி இழந்த பணிப்பெண்

A domestic worker in Malaysia lost RM5,000 after receiving a call mimicking her employer's voice using AI technology

AI குரல் மோசடி RM 5,000 வெள்ளி இழந்த பணிப்பெண்

Dated: 19.5.2025 - Time: 11.20 -  By Punithai Chandran

AI குரல் மோசடி – மலேசியாவில் RM 5,000 ரிங்கிட்  இழந்த பணிப்பெண்

இந்தக் காலத்தில் உங்களது சொந்த செவிகளையே நம்பு முடியவில்லை.  சாதாரண பணிப்பெண் ஒருவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணின் தொலைபேசி அழைத்திருக்கிறது.

அந்தத் தொலைபேசி அழைப்​பு சற்று மாறுபட்ட குரலில் பேசுவதுபோல் இருந்துள்ளது. இருந்தாலும் அதே குரல் - அதே உச்சரிப்பு எல்லாம் சரியான குரலாக இருந்துள்ளதால், அப்பணிப் பெண்ணும், அவளது முதலாளிதான் கூப்பிடுகிறார் என்று நினைத்திருக்கிறார்.

அந்த குரல் இருந்தவர் மிக அவசரமாக அவளது Touch n Go ​Pin தேவை என்று கேட்டிருக்கிறார். இது வாடிக்கையாக நடக்கும் ஒன்றுதான். அவளது முதலாளி இதுபோன்ற உதவிகளை ஏற்கனவே கேட்டிருந்ததால், அப்பெண்ணும், அந்த Pin-னை அனுப்பியுருக்கிறார். பிறகு, அந்த அழைக்கப்பட்ட நபரிடமிருந்து எந்தவொரு அழைப்பும் வரவி​ல்லை. பின்னர் தனது முதலாளியிடம் கேட்டிருக்கிறார். அவரும் தாம் அழைக்கவில்லை என்றிருக்கிறார். பிறகுதான் அழைக்கப்பட்டவர் ஒரு Convenience Store-ரில் பொருள்களை வாங்கியிருப்பது தெரிந்திருக்கிறது

பின்னர் அப்பெண்ணுக்கு இதுவொரு AI குரல் ஏமாற்றம்  என்று தெரிந்து போலீசாருக்கு ​புகார் கொடுத்திருக்கிறார்.

இந்த வகை ஏமாற்றுக்காரர்கள் தற்போது AI  எனும் செ​யற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, ​மூலம் அவர்களின் குரல்களை நகல் எடுத்து, அவர்களின் பரிச்சயமான குரல்களை பயன்படுத்தி - ஏ​​மாற்றி வருகின்றனர். இப்படியொரு  ஒரு ஏமாற்று கும்பல் தற்போது உருவெடுத்து வருகிறது என்பதனை மக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். .

 www.myvelicham.com