மலேசிய அரசியல் ஒரு சதுரங்கம்: அமைச்சர்கள் ராஜினாமா - முன்னாள் அம்னோ தலைவர் பிகேஆர் கட்சியில் இணைந்தார்

Malaysia's political landscape witnesses significant changes as two senior ministers resign and former UMNO leader joins PKR.

மலேசிய அரசியல் ஒரு சதுரங்கம்: அமைச்சர்கள் ராஜினாமா - முன்னாள் அம்னோ தலைவர் பிகேஆர் கட்சியில் இணைந்தார்

Dated: 3.6.2025   Time: 11.55 am  By: Punithai Chandran

பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ராம்லி மற்றும் சுகாதார அமைச்சர் நிக் நாஸ்மி நிக் அஹ்மட் ஆகியோர் தங்கள் அமைச்சர் பதவிகளில் இருந்து ராஜினாமா  அறிவிப்புக்களுக்கு மத்தியில், அரசியலில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ள முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ச​​​ஃப்ருல் அசிஸ், பிகேஆர் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளது அனைவருடையக்  கவனத்தையும் ஈர்த்து, அதர்ச்சியைக் கொடுத்துள்ளது.

சஃப்ருலின் கடந்த 1997 ஆண்டு முதல் அம்னோவில் ஓர் ஆழமான - விசுவாசமான உறவில் இருந்ததால், அம்னோவில் உச்சமன்ற உறுப்பினர் மற்றும் கோத்தா ராஜா பிரிவுத் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்துள்ளார். இந்த முக்கிய முடிவை எடுப்பதற்கு முன்னர், அம்னோ தலைவர் மற்றும் பல்வேறு தரப்பினருடன் ஓர் ஆழமான உறவுடன் இருந்துள்ளதாகவும் அவர் வெளிப்படையாகவே கூறியுள்ளார். சஃப்ருல் தனது உறுப்பினர் விண்ணப்பம் குறித்து, பிகேஆர்  தலைவர்களுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசியல் சதுரங்கத்தில், அம்னோவின் விசுவாசி ஒருவர், கட்சி மாறுவது ஒற்றுமை அரசாங்கத்தின் செயல்திறனை மறுவடிவமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிகேஆர் கட்சியின் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களால் அரசியல் வட்டாரங்களில் தீவிர விவாதங்கள் தலைதூக்கியுள்ளன.

இரண்டு மூத்த அமைச்சர்கள் தங்கள் பதவிகளை விட்டு வெளியேறியதும், ஒரு முன்னாள் அ​ம்னோ தலைவர் பிகேஆர்  கட்சியில் சேருவதும், ஒற்றுமை அரசாங்கத்தின் பரிணாம வளர்ச்சியின் பின்னணியில்,  மலேசிய அரசியல் ஒரு சிக்கலான காலக்கட்டத்தில் உள்ளது என்பதனை​யே இது காட்டுகிறது.

நன்றி. டிஆர்பி முகநூல்