பேராக் காவல்துறை கைவிடப்பட்ட SUV-யிலிருந்து RM4.6M போதைப்பொருட்கள் பறிமுதல்

Dated: 11.6.2025 Time: 1.40 pm By: Punithai Chandran
ஈப்போ,
பேராக், கிரிக், தாமான் பூலாய் செவன்னா, நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்குபோதைப்பொருட்களை காவல்துறை கண்டெடுத்துள்ளது. இதன் மதிப்பு அருகில், கைவிடப்பட்டிருந்த ஒரு விளையாட்டு பயன்பாட்டு வாகனத்தில் (SUV) இருந்து 123.2 கிலோ மெத்தாம்பேத்தமைன் மற்றும் கெத்தமைன் 4,667,850 ரிங்கிட் ஆகும்.
பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், ஹோண்டா HRV ரக காரில் இருந்து இந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பேராக் காவல்துறை தலைவர் நூர் ஹிஷாம் நோர்டின் தெரிவித்தார்.
82.8 கிலோ எடை கொண்ட 80 வெளிப்படையான பிளாஸ்டிக் பொட்டலங்களில் மெத்தாம்பேத்தமைனும், 40.4 கிலோ எடை கொண்ட 39 வெளிப்படையான பொட்டலங்களில் கெத்தமைனும் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த போதைப் பொருள் பறிமுதல், இந்த ஆண்டு பேராக் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய பறிமுதல்களில் ஒன்றாகும் என்று அவர் தெரிவித்தார். காரின் ஓட்டுநர் அல்லது பயணிகள் கண்டு பிடிக்கப்படவில்லை என்றும், இயந்திர எண்ணை சரிபார்த்ததில் அந்த வாகனம் ஒரு போலியான கார் என்று அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு அபாயகரமான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நன்றி.எஃப்எம்டி