2018ஆம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் பிரதமர் அன்வாருக்கு இடைக்கால தடை
The Malaysian Court of Appeal has granted a temporary stay on all proceedings related to a civil suit filed against Prime Minister Anwar Ibrahim over a 2018 sexual assault allegation by Muhammad Yusoff Rawther.

Dated: 10.6.2025 Time: 3.15 pm By: Punithai Chandran
கோலாலம்பூர்,
மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று, பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக, முகம்மது யூசுப் ராவுத்தர் கடந்த 2018ஆம் ஆண்டு அவர் மீது கூறிய பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டிற்காக, தாக்கல் செய்த சிவில் வழக்குடன் தொடர்புடைய அனைத்து நடைமுறை நடவடிக்கைகளையும், தற்காலிகமாக நிறுத்தும் இடைக்கால தடை உத்தரவை வழங்கியுள்ளது.
முழுமையான தடை உத்தரவைப் பெறுவதற்கான பிரதமரின் முயற்சி முடிவடைந்ததற்குப் பின்னர், இந்த வழக்கினை ஒத்தி வைக்க வேண்டும் என்ற அன்வாரின் கோரிக்கையை, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அங்கீகரித்தற்குப் பின்னரே இந்த இடைக்கால தடை வழங்கப்பட்டது.
முழு உத்தரவை பெறுவதற்கான விசாரணை ஜூலை 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
நன்றி. மலேசிய கினி.