டாக்சி ஓட்டுநர் ஒழுங்குமுறை அமைப்பை, பேருந்துகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்ம்

டாக்சி ஓட்டுநர் ஒழுங்குமுறை அமைப்பை, பேருந்துகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்ம்

Dated: 14.6.2025   Time: 3.00 pm  By: Punithai Chandran

கோலாலம்பூர்

டாக்ஸி ஓட்டுநர்களை பணியமர்த்துவதை ஒழுங்குபடுத்துவதற்கு தற்பொழுது பயன்பாட்டில் இருந்து வரும் ஒரு முறையை, பேருந்து நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டுமென்று, விரைவு மற்றும் பேருந்து இயக்குபவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும், பான் தலைவர் டத்தோ முகமது அஷ்ஃபர் அலி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். அவர்களுக்கும் "ஓட்டுநர் அட்டை" அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக தாம் கேட்டுக் கொண்டிருந்தாலும், எதுவும் நிறைவேறவில்லை என்று அவர் கூறினார்.

டாக்ஸி ஓட்டுநர்கள் ஒரு நிறுவனத்தை விட்டு மற்றொரு நிறுவனத்தில் சேர விரும்பினால், அவர்கள் நிலப் பொதுப் போக்குவரத்து நிறுவனத்திடம் (APAD) ஒப்புதல் பெ​ற்றிருக்க வேண்டும் என்று அஷ்ஃபர் கூறினார்.

நன்றி. நியூ ஸ்டெயிட்ஸ் டைம்ஸ்