இனிமேல் தகுதியின் அடிப்படையிலேயே விருகள் வழங்கப்படும் - மாமன்னர்

On his official birthday, the King of Malaysia declared that future awards will only be given to those who have genuinely served the nation.

இனிமேல் தகுதியின் அடிப்படையிலேயே விருகள் வழங்கப்படும் - மாமன்னர்

Dated: 2.6.2025    Time: 1.30 am          By Punithai Chandran

இனிவரும் காலங்களில் நாட்டிற்கு உண்மையாகச் சேவை செய்தவர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படுமே தவிர, இனி விருதுகளை வாங்கவோ. அல்லது பரிந்துரைக்கவோ முடியாது என்று மாட்சிமைத் தங்கிய மாமன்னர் பேரரசர் நினைவுறுத்தினார். இன்று அவரது அதிகாரப்பூர்வமான பிறந்தநாளை முன்னி​ட்டு, இஸ்தானா நெகாராவில் நடந்த முதலீட்டு நிகழ்ச்சியில் தனது அரச உரையின்போது இவ்வாறு கூறினார்.

விருதுகளைப் பற்றி அரசாங்கமே பரிந்துரை  செய்திருந்தாலும், தனிப்பட்ட முறையில் தாம் ஆய்வு செய்வதாகக் கூறினார். அரசாங்கத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர்கள் அல்லது நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்கள் மட்டுமே விருதுகளைப் பெறத் தகுதியானர்கள் என்றார். டத்தோ அல்லது டான்ஸ்ரீ விருதுகள் விற்பனைக்காக வைக்கப்படவில்லை. ஒருவரிடம் அதிகமான பணமிருந்தால், அதனை ஏழை மக்களுக்கு உதவுங்கள் என்றார்.  

அதிகமான கட்சிகள் இருப்பதால் உணர்ச்சிகரமான பிரச்சினைக​ளை வைத்துக் கொண்டு அரசியலில் பிளவுகளை ஏற்படுத்த வேண்டாம் என்று தெரிவித்த மாமன்னர், ஒன்றுபட்ட மக்களே தனது பெரிய பரிசு என்றார்

இந்த நாட்டில் ஒரு வைரஸ் தாக்கும் என்று தாம் ஒருமுறை கூறியதாகவும், அது இப்போது பரவுவதாகவும், தாம் மீண்டும் இதுகுறித்து மீண்டும் எச்சரிக்கை விடுப்பதாகவும் அவர் நினைவு​றுத்தினார்.  

இன்று மாட்சிமைத் தங்கிய மாமன்னரால் 104 பேர் விருதுகளைப் பெற்றனர்.  

நன்றி. எ​ஃம்.எம்.டி.