மலேசியாவின் டிஜிட்டல் திருப்புமுனையில் இறையாண்மைக்கும், கண்காணிப்புக்கும் இடையிலான சமநிலை
Malaysia is at a critical juncture in its digital governance, striving to balance "epistemic sovereignty"—ensuring Malaysian-led digital policy—with growing concerns over potential government surveillance.

Dated: 14.6.2025 Time: 6.25 pm By: Punithai Chandran
மலேசியாவின் டிஜிட்டல் ஆளுமையானது, ஒரு முக்கிய திருப்பு முனையில் உள்ளது. "அறிவார்ந்த இறையாண்மை" அதாவது டிஜிட்டல் கொள்கைகள் மற்றும் விவாதங்களில் மலேசியக் கட்டுப்பாடு மற்றும் அரசாங்கக் கண்காணிப்பு ஆகியவற்றுக்கு இடையே, மலேசியா ஒரு நுட்பமான சமநிலையை பேணிக் காத்து வருகிறது.
1998-இன் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம், டிஜிட்டல் பொருளாதாரத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், 2025-ஆம் ஆண்டில் வரவிருக்கும் ‘தரவு பகிர்வு சட்டம்’ போன்ற - அடுத்தடுத்த விரிவாக்கங்களால், பரந்த டிஜிட்டல் கண்காணிப்பு முறை குறித்த அச்சத்தையும் எழுப்புகின்றன.
மேலும், அரசாங்கம் தரவு சேகரிப்பு என்பது, கொள்கை உருவாக்கத்திற்கே அன்றி, தனி நபர்களைக் கண்காணிப்பதற்காக அல்ல என்று கூறுகிறது. இருப்பினும், தரவு தவறாகப் பயன்படுத்தப்படும் ஆபத்தும் உள்ளது.
வெளிப்படைத் தன்மை, சுயமான மேற்பார்வை, மற்றும் தரவு கண்காணிப்பை தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பது ஆகியவற்றை உறுதிச் செய்வதே மலேசியாவின் சவாலாக உள்ளது. இது வெளிப்படையான விவாதத்தை ஊக்குவிக்குமே தவிர, அதைத் தடுக்காது. எதிர்காலத்தின் ஆளுகைக்கும், மக்களின் பொது நம்பிக்கைக்கும் இடையே இதுவொரு சமநிலையை ஏற்படுத்தும்.
நன்றி. என்.எஸ்.டி.