பிரதமர் அன்வார் ஊழலுக்கு எதிரான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்

Dated: 14.6.2025 Time: 5.25 pm By: Punithai Chandran
கோலாலம்பூர்,
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஊழலுக்கு எதிரான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். மக்கள் ஆதரவு இருந்தாலும், இல்லாவிட்டாலும் தனது கடமையைச் செய்வேன் என்று அறிவித்தார்.
நாட்டில் ஊழல் பரவலாகவும், திட்டமிட்டு நடப்பதாகவும் இருந்த ஒரு சூழலில், அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை தாம் நன்கு அறிந்திருந்ததாக இன்று நடைபெற்ற தேசிய பத்திரிகையாளர் தின (ஹவானா) 2025 கொண்டாட்டத்தின் நிறைவு விழாவில் ஆற்றிய உரையில்,அன்வார் கூறினார்.
இருப்பினும், ஒப்பந்தங்கள் வழங்குவது உட்பட, எந்தவொரு முடிவையும் அரசாங்கம் எடுக்கும்போது, அது சரியான டெண்டர் மூலம் நடைபெற வேண்டும் என்பதே தமது நோக்கம் என்றார்.
தாம் கொண்டு வந்துள்ள சீர்திருத்தங்களால், ஊழலில் ஈடுபட்ட பலர் வருத்தத்துடன் இருப்பதாகவும், அவர்களில் சிலர் ஒன்று சேர்ந்து சில ஆளுமைகளுக்கு நிதியுதவி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
நன்றி. என்.எஸ்.டி.