இந்துப் பெருமக்கள் ஒற்றுமையுடன் பணியாற்றும் காலச் சூழலில் பயணிக்கிறோம்

The Malaysian Hindu Sangam Johor State Council's annual general meeting was successfully held in Skudai.

இந்துப் பெருமக்கள் ஒற்றுமையுடன் பணியாற்றும் காலச் சூழலில் பயணிக்கிறோம்

Dated: 27.5.25   Time:    12.00 pm   By: Punithai Chandran

இந்துக்கள் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும்.  மலேசிய இந்து சங்கம், ஜோகூர் மாநிலப் பேரவைகளின் ஆண்டு பொதுக் கூட்டம் கடந்த 17-05-2025 சனிக்கிழமை அன்று, காலை 9.00 மணி தொடக்கம்,  ஸ்கூடாய், ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலய மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

 கூட்டத்தில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு கி. ரவீன்குமார் மற்றும் தேசியத் தலைவர் ஸ்ரீகாசி சங்கபூஷன், தங்க கணேசன் ஆகியோர் கலந்து சிறப்புரை ஆற்றினர். மாண்புமிகு ரவீன்குமார், இந்துப் ​பெருமக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டிய காலச் சூழலில் பயணிக்கிறோம் என்றார்.

  

மேலும் சமயத்தையும், ஒற்றுமையையும் வளர்ப்பதற்கு ம.இ.கா ஜோகூர் மாநில சமய பிரிவுத் தலைவர்,  தொண்டர்மணி க. சேகரனிடம், ஜோகூர் மாநிலத்தில் உள்ள ஆலயங்களில், வாரம் ஒருறை ஆலயத்தில் சொற்பொழிவு நடத்த ஏற்பாடு செய்யுமாறு அவரை நியமித்தார். தேசியத் தலைவர் பேசுகையில், மாநில திருமுறை விழாவிற்கு 25,000 ரிங்கிட் வழங்குவதுடன், ஒவ்வொரு பேரவைக்கும் 5,000 ரிங்கிட் இந்த வருடம் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், மலேசிய இந்து சங்கம் செய்த பணிகள் மற்றும் வரும் காலங்களில்  மேற்கொள்ளப்பட வேண்டிய பணிககள் குறித்து பட்டிலிடப்பட்டன.

பின்னர், பேரவைக்கான ​பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் ஒருசில மட்டுமே புதியவர்களாகவும், மற்றவர்களின் பொறுப்பில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தலைவர் தெரிவித்தார்.

முன்னதாக, மாநில சமயப் பிரிவுத் தலைவர் மற்றும் ஸ்கூடாய் பேரவை தலைவர் கவிஞர் மோகனதாஸ் முனியாண்டி அவர்களின் “எண்ணச் சிறகுகள்” என்ற கவிதை நூல் வெளியீடு கண்டது. இக் கூட்டத்தில் 200 உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.