சிப்பாங்கில் கேபிள் திருட்டு கும்பல் கைது - போலீஸ் அதிகாரிகளும் சம்பந்தம்

Police in Sepang have busted a cable theft syndicate that had been operating for a year near Kampung Desa Putra.

சிப்பாங்கில் கேபிள் திருட்டு கும்பல் கைது - போலீஸ் அதிகாரிகளும் சம்பந்தம்

Dated: 28.5.2025     Time: 4.00 pm    By: Punithai Chandran

சிப்பாங்,

சிப்பாங், கம்போங் தேசா புத்ரா அருகே ஒரு வருட காலமாக நடத்தி வந்த கும்பலின் நடவடிக்கையை முடக்கியதை அடுத்து, கேபிள் திருட்டு கும்பலைச் சேர்ந்த 16 பேரை நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5 போலீஸ் அதிகாரிகளும் அடங்குவர்

.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் 1,000 ரிங்கிட் முதல் 2,000 ரிங்கிட் வரை சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த போலீஸ் அதிகாரிகள் குற்றத் தடுப்பு சம்பந்தமான ரகசிய தகவல்களையும் அந்தக் கும்பலுக்கு வழங்கி வந்துள்ளதுடன், அவசர கால அலா​ரங்களை எவ்வாறு அகற்றுவது என்பதையும் அக்கும்பலுக்கு கற்றுக் கொடுத்துள்ளதாக சிலாங்கூர் தலைமை போலீஸ் அதிகாரி கமிஷனர் டத்தோ ஹீசேன் ஓமான் கான் தெரிவித்தார்.  

இதுபோன்ற கேபிள் திருட்டு தொடர்பாக எந்தவொரு சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் இருந்தால், உடனடியாக போலீசாருக்கு புகார் அளிக்குமாறு டத்தோ ஹீசேன் கேட்டுக் கொண்டார்.