அரசியலில் பதவி என்பது வெகுமதி அல்ல. பிரதமர் எச்சரிக்கை
Prime Minister Anwar Ibrahim has emphasized that public service positions should be awarded based on merit and trustworthiness, and not be considered as political rewards. Citing a report by the Institute for Democracy and Economic Affairs (IDEAS), he stated that only capable individuals can effectively serve the people.

Dated: 28.5.2025 Time: 2.15 pm By: Punithai Chandran
பெட்டாலிங் ஜெயா, பொதுச் சேவைக்கான பதவிகளைப் பெறுவது, தகுதி மற்றும் திறமையின் வழியாக மற்றும் உண்மையான பொறுப்பைக் கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் பெற வேண்டுமே தவிர, அதனை அரசியல் வெகுமதி பொருளாகக் கருதி பெற கூடாது என்று ஜனநாயகம் மற்றும் பொருளதார நிறுவனம் (IDEAS) வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளது
.
ஒரு வெளிப்படையான மற்றும் நம்பகத் தன்மைக் கொண்ட திறனாற்றல் கொண்டவர்களால் மட்டுமே, மக்களுக்கு திறம்பட சேவையாற்ற முடியும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஐரா அஸ்ஹாரி கூறினார்.
பதவியேற்பவர்கள் அரசியல் பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் கூட, அந்த நியமனங்கள் அனைத்தும், தகுதி, நேர்மை மற்றும் தொழில்முறை அனுபவத்தின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது என்பதால், இந்த அரசியல் நியமனங்கள் அதிகார துஷ்பியோகம் ஆகாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அண்மையில் நடைபெற்ற பி.கே.ஆர். மாநாட்டில் தெரிவித்தார்.
இக்கருத்தினை அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் அக்மல் சாலே பாராட்டியதுடன், அரசாங்கம் தற்போது தேசிய முன்னணியின் செயல்பாட்டு முறையை புரிந்து வைத்திருப்பதாகக் கூறினார். நாட்டிற்கு ஒரு சிறந்த நல்லாட்சியை வழங்க வேண்டுமென்றால், சில வேளைகளில் சமரசம் செய்ய முடியாத கொள்கைகளால் மட்டுமே முடியும் என்று ஐரா கூறினார்.