தெலுங்கு சங்கத்தின் அன்னையர் தின விழா கொண்டாட்டம்

The Sungai Petani Telugu Sangam celebrated Mother's Day with a grand event following the Ugadi festival. President Dinakaran highlighted the importance of the mother tongue, the Sangam's activities, and future plans. The celebration included cultural performances, games, and a feast.

தெலுங்கு சங்கத்தின் அன்னையர் தின விழா கொண்டாட்டம்

Dated: 28.5.2025    Time: 11.15   By: ​Punitha Chandran

தெலுங்கு சங்கத்தின் அன்னையர் தின விழா கொண்டாட்டம்

சுங்கை பட்டாணி, -

சுங்கை பட்டாணி தெலுங்கு சங்கத்தினர்கள் உகாதி பண்டிகைக்குப் பின்னர், வழக்கமான விழாவான அன்னையர் தினத்தை சுங்கை பட்டாணி எஸ்.பி கிளப்பில் ​மிகச் சிறப்பாக கொண்டாடினர்.

தாய் மொழியால் மட்டுமே நமது எண்ணங்களையும் உணர்வுகளையும் மிக எளிதாக வெளிப்படுத்த முடியும். மேலும் குடும்ப உறுபபினர்கள், உறவினர்கள் மற்​றும் அந்தந்த      ச​மூகத்தவர்களுடன் ஆழமான உறவுகளையும் பேணிக் காக்க முடியும் என்பதால்தான், பல்வேறு தாய்மொழிகளைக் கொண்ட ச​மூகத்தினர் அவர்களை ஒன்றுபடுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.  

அந்த வகையில், தெலுங்கு சங்கத்தின் தலைவர் தினகரன் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில், கலைநிகழ்ச்யுடன் கூடிய விளையாட்டுப் போட்டியும், விருந்துபரிப்பும் நடைபெற்றது.  

மேலும், இச்சங்கம் ஒவ்வொரு வாரமும் கோல ​மூடா மாவட்டத்தில் உள்ள பல தமிழ்ப்பள்ளிகளில் தெலுங்கு வகுப்புகளை நடத்தி வருகிறது. இம்மொழியைக் கற்றுக் கொள்வதற்கு ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகளை இந்த வகுப்புகளுக்கு அனுப்பும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், சங்கம் பல திட்டங்களைக் கொன்டு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, மாணவர்களின் கல்வி வளர்ச்சி, வர்த்தக மற்றும் பொருளாதார மேம்பாடுகளில் சங்க உறுப்பினர்கள் பயன் பெற்று வருவதை தலைவர் தினகரன் சுட்டி காட்டினார்.