ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன நிதி முறைகேட்டால் சொத்துக்கள் பறிமுதல்- முடக்கம் - MACC அறிவிப்பு
The Malaysian Anti-Corruption Commission (MACC) has arrested an NGO chairman and three others for allegedly misappropriating RM26 million in public donations.

Dated: 16.6.2025 Time: 4.35 pm By: Punithai Chandran
கோலாலம்பூர்
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கடந்த வாரம் (MACC) ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் (NGO) அதன் தலைவர் உட்பட மூன்று சந்தேகப் பேர்வழிகள், 26 மில்லியன் ரிங்கிட் பொது மக்களின் நன்கொடைகளை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறியுள்ளது. அந்த இயக்கத்திற்குச் சொந்தமான நிதியை தவறாகப் பயன்படுத்தியை முன்னிட்டு, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக MACC தலைமை ஆணையர் அஸாம் பாக்கி கூறியுள்ளார். .
இவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிதியை தனிப்பட்ட கணக்குகளுக்கு மாற்றி, ஊழியர்களுக்கு கடன் வழங்கியதாகவும், சிரியா நாட்டிற்குல் மனிதாபிமான முறையில் கிணறு வெட்டும் கட்டுமான திட்டத்திற்கு பணம் வழங்கியதாகவும, எஞ்சியவற்றை கையாடல் செய்ததாகவும் நம்பப்படுகிறது.
ஊழல் தடுப்பு நிறுவனம் தனது விசாரணையின்போது, 8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாகவும், இந்த வழக்கு நம்பிக்கை குற்றவியல் முறையில் மீறியதற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 409-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது. .
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் 100,000 ரிங்கிட் மதிப்பிலான நகைகள், 1 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான ரொக்கம், சுமார் 650,000 ரிங்கிட் மதிப்பிலான கிரிப்டோகரன்சி கணக்குகள், மற்றும் 1.4 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நான்கு குடியிருப்புப் பகுதிகள் ஆகியவை அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பதினான்கு வங்கிக் கணக்குகள் – எட்டு தனிநபர்களுக்கு சொந்தமானவை என்றும், ஆறு நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்றும், மொத்தம் சுமார் 5 மில்லியன் ரிங்கிட் இருப்பும் முடக்கப்பட்டன என்று அஸாம் தெரிவித்தார்.
நன்றி. FMT