ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன நிதி முறைகேட்டால் சொத்துக்கள் பறிமுதல்- முடக்கம் - MACC அறிவிப்பு

The Malaysian Anti-Corruption Commission (MACC) has arrested an NGO chairman and three others for allegedly misappropriating RM26 million in public donations.

ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன நிதி முறைகேட்டால் சொத்துக்கள் பறிமுதல்- முடக்கம் - MACC அறிவிப்பு

Dated: 16.6.2025   Time: 4.35  ​pm  By: Punithai Chandran

கோலாலம்பூர்

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கடந்த வாரம் (MACC) ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் (NGO) அதன் தலைவர் உட்பட மூன்று சந்தேகப் பேர்வழிகள்,  26 மில்லியன் ரிங்கிட் பொது மக்களின் நன்கொடைகளை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறியுள்ளது.​ அந்த இயக்கத்திற்குச் சொந்தமான நிதியை தவறாகப் பயன்படுத்தியை முன்னிட்டு, இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக MACC தலைமை ஆணையர் அஸாம் பாக்கி கூறியுள்ளார். .

இவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிதியை தனிப்பட்ட கணக்குகளுக்கு மாற்றி, ஊழியர்களுக்கு கடன் வழங்கியதாகவும்,  சிரியா நாட்டிற்குல் மனிதாபிமான முறையில் கிணறு வெட்டும் கட்டுமான திட்டத்திற்கு பணம் வழங்கியதாகவும,  எஞ்சியவற்றை கையாடல் செய்ததாகவும் நம்பப்படுகிறது.

ஊழல் தடுப்பு நிறுவனம் தனது விசாரணையின்போது, 8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளதாகவும், இந்த வழக்கு நம்பிக்கை குற்றவியல் முறையில் மீறியதற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 409-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது. .

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் 100,000 ரிங்கிட் மதிப்பிலான நகைகள், 1 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான ரொக்கம், சுமார் 650,000 ரிங்கிட் மதிப்பிலான கிரிப்டோகரன்சி கணக்குகள், மற்றும் 1.4 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நான்கு குடியிருப்புப் பகுதிகள் ஆகியவை அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பதினான்கு வங்கிக் கணக்குகள் – எட்டு தனிநபர்களுக்கு சொந்தமானவை என்றும், ஆறு நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்றும், மொத்தம் சுமார் 5 மில்லியன் ரிங்கிட் இருப்பும் முடக்கப்பட்டன என்று அஸாம் தெரிவித்தார்.

நன்றி. FMT