பொது சுகாதாரம் - இளைஞர்களைப் பாதுகாக்க தேசிய அளவில் அரசாங்கம் Vape-க்கு தடை விதிக்க வேண்டும்
Member of Parliament R. Yuneswaran urges Putrajaya asked putra jaya to implement a nationwide ban on vape products

Dated: 3.6.2025 Time: 3.40 pm By: Punithai Chandran
சிகாமட்,
புகைப் பிடிப்பதை நிறுத்துவதற்கு மாநில அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுடன் ஒப்பிடும்போது, தேசிய அளவில் தற்போது உள்ள அதன் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சற்று பலவீனமாக உள்ளது என்று சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன் கூறியுள்ளார்.
பொது சுகாதாரம், இளைஞர்கள் நிகோடின் போதைக்கு அடிமையாகுவது ஆகியவற்றினை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், வேப் (Vape) தயாரிப்புக்களின் விற்பனை மற்றும் அதன் விநியோகத்திற்கு முழுத் தடை விதிக்க வேண்டுமென்றார்.
இந்தப் பழக்கமானது வரைமுறை மீறி ஆச்சரியத்தை ஊட்டும் அளவுக்கு அதன் புள்ளிவிவரம் அதிகரித்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை புத்ரா ஜெயா விரைவில் எடுக்காவிட்டால், நீண்டகால சுகாதார நெருக்கடிகளும், அதிகச் சுமை கொண்ட பொது சுகாதாரமும் பாழ்படும்.
1917ஆம் ஆண்டு 9.8% ஆக இருந்த இளைஞர்களின் vape மற்றும் மின்-சிகரெட் பயன்பாடு 2022 இல் 14.9% ஆக அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், வேப்-பில் உள்ள நிகோடின் திரவங்களை 1952-ஆம் ஆண்டே விஷப் பொருட்கள் என்று அறிவித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
எனவே, அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை முன்னிருத்தி, ஆரோக்கியமான மலேசியாவை உறுதிப்படுத்த வேண்டுமென்றால், Vape-ப்பை முழுமையாக தடைச் செய்யுமாறு ஆர். யுனேஸ்வரன் புத்ரா ஜெயாவை வலியுறுத்தினார்.
நன்றி. எஃப்எம்டி