பொது சுகாதாரம் - இளைஞர்களைப் பாதுகாக்க தேசிய அளவில் அரசாங்கம் Vape-க்கு தடை விதிக்க வேண்டும்

Member of Parliament R. Yuneswaran urges Putrajaya asked putra jaya to implement a nationwide ban on vape products

பொது சுகாதாரம்  - இளைஞர்களைப் பாதுகாக்க தேசிய அளவில் அரசாங்கம் Vape-க்கு தடை விதிக்க வேண்டும்

Dated: 3.6.2025   Time: 3.40 pm  By: Punithai Chandran

சிகாமட், 

புகைப் பிடிப்பதை நிறுத்துவதற்கு மாநில அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுடன் ஒப்பிடும்போது, தேசிய அளவில் தற்போது உள்ள அதன் கட்டுப்பா​ட்டு நடவடிக்கைகள் சற்று பலவீனமாக உள்ளது என்று சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன் கூறியுள்ளார்.

பொது சுகாதாரம், இளைஞர்கள் நிகோடின் போதைக்கு அடிமையாகுவது ஆகியவற்றினை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், வேப் (Vape) தயாரிப்புக்களின் விற்பனை மற்றும் அதன் விநியோகத்திற்கு முழு​த் தடை விதிக்க வேண்டுமென்றார்.

இந்தப் பழக்கமானது வரைமுறை மீறி ஆச்ச​ரியத்தை ஊட்டும் அளவுக்கு அதன் புள்ளிவிவரம் அதிகரித்து வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை புத்ரா ஜெயா விரைவில் எடுக்காவிட்டால், நீண்டகால சுகாதார நெருக்கடிகளும், அதிகச் சுமை கொண்ட பொது சுகாதாரமும் பாழ்படும்.

1917ஆம் ஆ​ண்டு 9.8% ஆக இருந்த இளைஞர்களின் vape மற்றும் மின்-சிகரெட் பயன்பாடு 2022 இல் 14.9% ஆக அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், வேப்-பில் உள்ள நிகோடின் திரவங்களை 1952-ஆம் ஆண்டே விஷப் பொருட்கள் என்று அறிவித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

எனவே, அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை முன்னிருத்தி, ஆரோக்கியமான மலேசியாவை உறுதிப்படுத்த வேண்டுமென்றால், Vape-ப்பை முழுமையாக தடைச் செய்யுமாறு ஆர். யுனேஸ்வரன் புத்ரா ஜெயாவை வலியுறுத்தினார்.

நன்றி. எஃப்எம்டி