ஜனநாயகத்தின் மறுமலர்ச்சிக்கு நூலகங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும்
Prime Minister Datuk Seri Anwar Ibrahim warned that the dwindling interest in reading poses a severe threat to journalism, education, public knowledge, and democracy.

Dated: 17.6.2025 Time: 2.00 pm By: Punithai Chandran
கோலாலம்பூர்
வாசிப்புப் பழக்கத்தின்கழ மீது குறைந்து வரும் ஆர்வம், பத்திரிகைத் துறை, ஊடகத் துறை, கல்வி, பொது அறிவு, ஜனநாயகம் ஆகியவற்றுக்கு தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெற்காசிய நூலகர்கள் மாநாட்டின் (CONSAL) 19-ஆவது பொதுச் சங்க கூட்டத்தில் நிகழ்த்திய உரையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இப்போது நூலகங்களில் பணியாற்றபவர்கள், அறிவை பாதுகாப்பதற்கான பொறுப்பையும், நூலகங்களை சமூக மையங்களாக மாற்றும் முக்கிய பங்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.
வாசிப்புப் பழக்கத்தை இழந்துள்ள நாம், மீண்டும் அதனை மீட்டெடுக்கப்பட வேண்டும். படைப்பாற்றல் மற்றும் அர்த்தமுள்ள விமர்சன சிந்தனைகளின் வீழ்ச்சி — ஒரு வலுவான அறிவு சார்ந்த மரபு உண்மைகளை புரிந்துக் கொள்வதில் வீழ்ச்சி - ஆகியப் போக்கு 1980-ஆம் ஆண்டுகள் முதல் மோசமடைந்து வருவதாக அவர் வருத்தப்பட்டார்.
இதனை களையவில்லை என்றால், அதன் விளைவுகள் ஆழமாக இருக்கும். குறிப்பாக இன்றைய விரோதமான, வெறுப்பு நிறைந்த விவாதங்களைப் பார்த்தோமானால் — சர்ச்சைக்குரிய, ஆழமற்ற ஜனரஞ்சகமான மற்றும் அறியாமையால் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. இந்த போக்கைத் தடுப்பதற்கு, நூலகங்களுக்கும் நூலகர்களுக்கும் இப்போது பெரிய பொறுப்புள்ளது என்றும் அவர் கூறினார்.
அங்கோர் வாட் மற்றும் மலாக்கா போன்ற தென்கிழக்கு ஆசியாவின் செழுமை நிறைந்த பாரம்பரியத்தைப் பற்றி இளையோர் அறிந்துக் கொள்ளாமல், மேற்கத்திய நாகரிகங்களை நாடாமல் இருப்பது நன்மை பயக்கும். நூலகங்கள் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவை (AI) ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றாலும், இளம் வயதினரிடையே வாசிப்பின் ஆர்வத்தைத் தூண்டுவதே இப்போதுள்ள நமது முக்கியக் கடமையாகும் என்றும் அன்வார் மேலும் கூறினார்.
நன்றி. பெர்னாமா