செயற்கை நுண்ணறிவு பத்திரிகையாளர்களுக்கு மாற்றாக அமையாது - அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில்
Communications Minister Fahmi Fadzil asserts that artificial intelligence will not replace journalists, though he encourages media professionals to explore how AI can assist their work.

Dated: 13.6.2025 Time: 11.15 am By: Punithai Chandran
பெட்டாலிங் ஜெயா
செயற்கை நுண்ணறிவு பத்திரிகைத் தொழிலுக்கு எவ்வாறு துணையாக இருக்கும் என்பதை ஆராயுமாறு தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் ஊடகவியலாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த கட்டத்தில் செயற்கை நுண்ணறிவு பத்திரிகையாளர்களுக்கு மாற்றாக அமைய முடியும் என்று தாம் கருதுவில்லை என்றாலும் கூட, செயற்கை நுண்ணறிவு இந்தப் பணிகளுக்கு எவ்வாறு உதவ முடியும் மற்றும் அதன் திறன்களையும், வரம்புகளையும் புரிந்துக் கொள்ளும்படியும் என்றும் கோலாலம்பூரில் தேசிய பத்திரிகையாளர் தினத்தின்போது அவர் கூறினார்.
இதன்வழி ஊடக நிறுவனங்களையும், வல்லுநர்களையும் அவர்கள் தங்கள் பணியில் இந்த தொழில்நுட்பத்தை உகந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் ஃபஹ்மி கூறினார்.
நன்றி. எஃப்எம்டி