மலேசியா-வியட்நாம் ஆசிய கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிக்கு 60,000 பேர் திரளுவார்கள் என எதிர்பார்ப்பு

Kuala Lumpur: Around 60,000 fans are expected to attend the 2027 Asian Cup qualifier between Malaysia and Vietnam at Bukit Jalil tonight.

மலேசியா-வியட்நாம் ஆசிய கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிக்கு 60,000 பேர் திரளுவார்கள் என எதிர்பார்ப்பு

Dated: 10.6.2025   Time: 2.35 pm   By: Punithai Chandran

கோலாலம்பூர்,    

இன்று இரவு புக்கிட் ஜாலில் நடைபெறவுள்ள ​மலேசியா மற்றும் வியட்நாம் இடையிலான, 2027 ஆசிய கோப்பை தகுதிச் சுற்றுக்கான காற்பந்து போட்டியைக் காண 60,000 ரசிகர்கள் திரளுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக செராஸ் துணை மாவட்ட காவல்துறை அதிகாரி சூப்பரிடெண்ட்ன்ட் ரித்வான் காலிட் தெரிவித்துள்ளார்.

எனவே, போட்டிக்குச் செல்லாத பொதுமக்கள்,ஸ்டேடியத்திற்கு செல்லும் சாலைகளை தவிர்க்கும்படியும், வாகன ஓட்டுநர்கள் தங்களது பயணத்தின்போது பொறுமையையும், மரி​யாதையையும் கடைப்பிடிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். பொதுப் பாதுகாப்பை பாதிக்கும் வகை​யில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு எதிராக, அபராதங்கள் விதிக்கப்படும் அல்லது அவை இழுத்துச் செல்லப்படும் என்றார்.

மேலும், ஆயுதங்கள், மதுபானங்கள் மற்றும் பட்டாசுகள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை விளையாட்டு அரங்கத்திற்குள் எடுத்துச் செல்வதைத் தடுக்க, கடுமையான சோதனைகளும், உடல் மற்றும் பைகளிலும் சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. 

அரங்கத்தின் நு​ழைவாயில் பிற்பகல் 3.00 மணிக்குத் திறக்கப்படும். போட்டி நடைபெறும்போதும், அதற்குப் பின்பும் கலவரம் ஏற்படுத்துவோருக்கு எதிராக போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றும் ரித்வான் தெரிவித்தார்.

ந​ன்றி. த ஸ்டார்

Top of Form