கோயில் தலைவர், செயலாளர் RM50,000 நிதி கையாடல் வழக்கில் ரிமாண்ட்

The chairman and secretary of a temple association in Melaka have been remanded for six days until June 23, 2025, to assist in an investigation by the Malaysian Anti-Corruption Commission (MACC).

கோயில் தலைவர், செயலாளர் RM50,000 நிதி கையாடல் வழக்கில் ரிமாண்ட்

Dated: 18.6.2025   Time: 12.35 ​pm  By: Punithai Chandran

மலாக்கா,

கடந்த ஆண்டு கோவிலில் இருந்து 50,000 ரிங்கிட்  நிதியை, தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒரு வழக்கின் விசாரணைக்கு உதவுவதற்காக, 61 மற்றும் 75 வயதுடைய, கோயில் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரையும் ஜூன் 23 வரை, மலாக்கா மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (MACC) ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கோவில் நிதியை அனுமதி இல்லாமல் அல்லது நிர்வாகக் குழு கூட்டத்தில் சமர்ப்பிக்காமல் எடுத்ததன் மூலம், அதிகாரம் மற்றும் பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் விசாரணைக்காக,  நேற்று காலை 11.45 மணியளவில், மலாக்கா MACC அலுவலகத்திற்கு வந்தபோது, அவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தப் பணம் தனிப்பட்ட பயன்பாட்டிற்காகச் செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மலாக்கா MACC இயக்குநர் அடி சுபியான் ஷாஃபி இவர்களின் கைது ரிமாண்ட் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

நன்றி. எஃப்எம்டி