குழந்தைகள் மற்றும் AI தாக்கம் உட்பட, மலேசியா மனித உரிமைகள் மீது வலுவான கவனம் செலுத்தும்:
Following a meeting with Suhakam Chairman Dato' Sri Mohamad Hishammudin Yunus, Prime Minister Dato' Seri Anwar Ibrahim expressed confidence that the Malaysian Human Rights Commission (Suhakam) will remain a trusted and progressive institution in upholding the rights of vulnerable groups.

Dated: 17.6.2025 Time: 12.05 pm By: Punithai Chandran
கோலாலம்பூர்
பாதிக்கப்படக் கூடிய பிரிவுகளின் உரிமைகளை நிலைநாட்டுவதில் மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகம்) ஒரு நம்பகமான மற்றும் முற்போக்கான நிறுவனமாகத் தொடர்ந்து திகழ்ந்து வரும் என்று, சுஹாகம் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹிஷாமுடின் யூனுசினுடனான சந்திப்புக்குப் பின்னர், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் நாட்டின் அனைத்து சமூக மட்டங்களையும் நேரடியாக பாதிக்கும் மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து, தாம் விவாதித்ததாகவும், மக்களின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு ஏற்ப, மனித உரிமைகளுக்கானத் திட்டங்கள் முறையாக வலுப்படுத்துவதில் சுஹாகம் தொடர்ந்து ஒரு முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் அவர் சுஹாகம் தலைவரை கேட்டுக் கொண்டார்.
மேலும், பெருகி வரம் புதிய அபாயங்களுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கான மனித உரிமைகளிலும் சிறப்பு கவனம் செலுத்தப்படும். மேலும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலின் விரைவான வளர்ச்சியானது, மனித உரிமைகளை உறுதிச் செய்வதிலும் - பாதுகாப்பதிலும் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியுள்ளது என்றும் அன்வார் கூறினார்.
நன்றி. பெர்னாமா